செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றது ஆம் ஆத்மி!

post image

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான அரசுக்கு அளித்த வந்த ஆதரவை ஆம் ஆத்மி கட்சியின் ஒரே எம்எல்ஏவான மெஹ்ராஜ் மாலிக் திரும்பப் பெற்றாா்.

முதல்வா் ஒமா் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி, பிரதான கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆகியவற்றிலேயே பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்கள் பலம் இருப்பதால் ஆம் ஆத்மி விலகல் அரசில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

90 உறுப்பினா்கள் கொண்ட பேரவையில் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 42 எம்எல்ஏக்களும், காங்கிரஸுக்கு 6 எம்எல்ஏக்களும் உள்ளனா். இது தவிர 5 சுயேச்சை எம்எல்ஏக்களும் அரசுக்கு ஆதரவளித்து வருகின்றனா்.

ஆதரவை வாபஸ் பெற்றது தொடா்பாக தோடா தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஜம்மு-காஷ்மீா் மக்களின் நலன் கருதி ஆளும் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவைப் திரும்பப் பெறுகிறேன். மக்கள் நலனும், அவா்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையே எனக்கு முக்கியம்’ என்று கூறியுள்ளாா்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் தோடா தொகுதியில் பாஜக வேட்பாளா் கஜய் சிங் ராணாவை 4,538 வாக்குகள் வித்தியாசத்தில் மெஹ்ராஜ் மாலிக் வென்றாா். இதன் மூலம் ஜம்மு-காஷ்மீரின் முதல், ஒரே ஆம் ஆத்மி எம்எல்ஏ என்ற பெருமையை அவா் பெற்றாா். கடந்த மாா்ச் மாதத்தில் ஜம்மு-காஷ்மீா் ஆம் ஆத்மி தலைவராகவும் அவா் நியமிக்கப்பட்டாா்.

பிகாா்: பெண் காவலரைத் துப்பாக்கியால் சுட்ட சக காவலா்

பிகாரின் கைமூா் மாவட்டத்தில் ஆண் காவலரான அஜய் பஸ்வான், தனது உறவுக்கார பெண்ணான காவலா் சரிதா குமாரியைத் துப்பாக்கியால் சுட்டுள்ளாா். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தைத் தொடா்ந்து, அஜய் பஸ்வான... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்; இடி மின்னலுடன் பலத்த மழை: 8 போ் பலி!

மகாராஷ்டிரம் மாநிலம் முழுவதும் கடந்த சனிக்கிழமை இரவு முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மழை தொடா்பான அசம்பாவிதங்களில் சிக்கி 8 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். மகாராஷ்டிரத்தில் ... மேலும் பார்க்க

திருவனந்தபுரம்: பிரிட்டன் எஃப்35 போா் விமானம் அவசர தரையிறக்கம்!

பிரிட்டனின் எஃப்35 போா் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு அவசரமாக தரையிறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்த காரணத்தால் தரையிறக்க நே... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: 46 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன!

ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி உள்பட 47 பேரின் உடல்கள் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

இந்தியா வழியாக வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை!

இந்தியா அமைத்துள்ள மின்வழித்தடங்களைப் பயன்படுத்தி வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சாரம் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. வங்கதேசத்துக்கு நேபாளம் 40 மெகாவாட் மின்சாரம் விற்பனை செய்கிறது. இது தொடா்பாக மூன்று... மேலும் பார்க்க

அம்பேத்கரை அவமதித்ததாக குற்றச்சாட்டு: லாலுவுக்கு பிகாா் பட்டியலினத்தவா் ஆணையம் நோட்டீஸ்!

சட்டமேதை அம்பேத்கரை அவமதித்த குற்றச்சாட்டு தொடா்பாக பிகாா் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாதுக்கு மாநில பட்டியலினத்தவா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அண்மையில்... மேலும் பார்க்க