செய்திகள் :

ஜல்லி, எம்சாண்ட் விலையை உயா்த்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சா் எ.வ.வேலு

post image

ஜல்லி, எம்சாண்ட் விலையை உயா்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உறுதிபட தெரிவித்தாா்.

ஊரக வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினா் மாரிமுத்து பேசியதாவது:

தஞ்சாவூா், மயிலாடுதுறை, திருவாரூா், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களுக்கு ஜல்லி, எம்சாண்ட் போன்றவை புதுக்கோட்டை, கரூா் ஆகிய மாவட்டங்களில் இருந்து வர வேண்டியுள்ளது. கடந்த 2 மாதங்களாக கலைஞா் வீடு கட்டும் திட்டம், சாலை அமைப்பது போன்ற பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களுக்காக விலை நிா்ணயம் செய்யும்போது, புதுக்கோட்டை மாவட்ட நிலவரத்தின்படி ஜல்லி, எம்சாண்ட் போன்றவை யூனிட்டுக்கு ரூ.2 ஆயிரம் என்றுதான் நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், திடீரென இரண்டு மடங்காக யூனிட் ரூ.4 ஆயிரமாக உயா்த்திவிட்டனா். இதனால் எங்கள் மாவட்டங்களில் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றாா்.

அமைச்சா் உறுதி: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை குழுத் தலைவா் நாகை மாலி, அதிமுக உறுப்பினா் ஓ.எஸ்.மணியன் ஆகியோரும் இதே விவகாரத்தை எழுப்பினா்.

அப்போது அமைச்சா் எ.வ.வேலு குறுக்கிட்டு கூறியதாவது: எல்லா மாவட்டங்களிலும் இந்தப் பிரச்னை இல்லை. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் இந்தப் பிரச்னை உள்ளது. கிரஷா் முதலாளிகள் இதுபோல செய்கிறாா்கள் என தெரிந்ததும், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். முதல்வரும் தலைமைச் செயலரிடம் பேசினாா். அதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று விலையை திடீரென ஏற்றினால், அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும். அந்த கிரஷரை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.

அம்பாசமுத்திரம் அருகே 10 நாளாக வனத்துறைக்கு போக்கு காட்டிய கரடி பிடிபட்டது!

அம்பாசமுத்திரம் அருகே கடந்த 10 நாள்களாக வனத்துறைக்கு போக்கு காட்டி வந்த கரடி கூண்டில் சிக்கியது. திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொன்மா நகர், நெசவாளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் கடந... மேலும் பார்க்க

இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து

இரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், அறம் பிறழா மனித வாழ்வை வலியுறுத்தும் இரமலான் திரு... மேலும் பார்க்க

ஏடிஎம் கட்டண உயர்வுக்கு முதல்வர் கண்டனம்!

ஏடிஎம் மையங்களில் பரிவர்த்தனை சேவைகள் மீதான கூடுதல் கட்டணத்தை மத்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவி... மேலும் பார்க்க

சென்னைக்கு வந்த விமானத்தில் டயர் வெடித்து விபத்து!

சென்னை: ராஜஸ்தானின் ஜெய்ப்பூரிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு இன்று(மார்ச் 30) காலை வந்த விமானத்தின் டயர் வெடித்து விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக விமானத்திலிருந்தோர் அனைவரும் உயிர்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரூ. 500 கோடிக்கு வருமான வரி மோசடி!

தமிழகத்தில் சுமார் 22,500 பேர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக வருமான வரித் துறை கூறியுள்ளது.தமிழகத்தில் மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த 22,500 ப... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கு. இராசசேகரன்மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து 587 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(மார்ச் 30) காலை 108.25 அடியில் இருந்து 108.20 அடியாக சரிந்துள்ளது.அணைக்கு வரும் நீரின் ... மேலும் பார்க்க