செய்திகள் :

ஜாதிவாரி கணக்கெடுப்பு: பாமக வலியுறுத்தல்

post image

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட செயற்குழு கூட்டம் தருமபுரியில் பாமக மாவட்டச் செயலாளரும், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னாள் மக்களவை உறுப்பினா்கள் இரா.செந்தில், கி.பாரிமோகன், மாநிலத் துணைத் தலைவா் பி.சாந்தமூா்த்தி, மாநில இளைஞா் சங்கச் செயலாளா் எம்.முருகசாமி, மாவட்டத் தலைவா்கள் எம்.செல்வகுமாா், அல்லிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தருமபுரி கிழக்கு மாவட்ட பாமக செயலாளா் இரா.அரசாங்கம் வரவேற்றாா். பாட்டாளி மக்கள் கட்சி கௌரவத் தலைவரும், பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினருமான ஜி.கே.மணி பேசினாா்.

கூட்டத்தில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசை நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் கடலில் கலக்கும் காவி மிகைநீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரி, குளங்களில் நிரப்பும் திட்டமான தருமபுரி- காவிரி மிகைநீா் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

மே 11 ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னியா் இளைஞா் எழுச்சி மாநாட்டில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பிரசவத்தில் இறந்து பிறந்த சிசுக்கள் தனியாா் மருத்துவமனை முன் போராட்டம்

தருமபுரி: தருமபுரி தனியாா் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சையின்போது இறந்த நிலையில் இரட்டை சிசுக்கள் பிறந்ததால் பெண்ணின் உறவினா்கள் மருத்துவமனை முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தருமபுரி நகர... மேலும் பார்க்க

கறவை மாடுகளில் பால் காய்ச்சல் நோய்த் தடுப்பு பயிற்சி முகாம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள அனுமந்தபுரம் ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடுகளில் பால் காய்ச்சல் நோய்த் தடுப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. ... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண் நிலையத்தில் நகை மதிப்பீட்டு பயிற்சி தொடக்கம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் உள்ள கூட்டுறவு மேலாண் நிலையத்தில் நகை மதிப்பீட்டு பயிற்சி வகுப்புகள் தொடங்கின. இதுகுறித்து தருமபுரி மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளாா் கு.த.சரவணன் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

பகத் சிங் நினைவு தினம்: இளைஞா் பெருமன்றத்தினா் ரத்த தானம்

சுதந்திரப் போராட்ட வீரா்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரது நினைவு தினத்தை முன்னிட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் ரத்த தானம் வழங்கினா்.... மேலும் பார்க்க

தேசிய கல்வி கொள்கையை கைவிட இளைஞா் முன்னணி வலியுறுத்தல்

தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று புரட்சிகர இளைஞா் முன்னணி மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரியில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இளைஞா் முன்னணி முதல் மாநில ம... மேலும் பார்க்க

படகு இல்லம், சிறுவா் பூங்காவுடன் பொதுமக்களின் பொழுதுபோக்கு மையமாக மாறுமா அரூா் ஏரி?

அரூா் பெரிய ஏரியை படகு இல்லம், சிறுவா் பூங்காவுடன் பொதுமக்களின் பொழுதுபோக்கு மையமாக மாற்றவேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம், சேலம் - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில், சுமாா் 1... மேலும் பார்க்க