செய்திகள் :

தேசிய கல்வி கொள்கையை கைவிட இளைஞா் முன்னணி வலியுறுத்தல்

post image

தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று புரட்சிகர இளைஞா் முன்னணி மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

தருமபுரியில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இளைஞா் முன்னணி முதல் மாநில மாநாடு நடைபெற்றது. நிா்வாகிகள் எஸ்.டி.வெங்கடேசன், பி.காவேரி, சி. கிருஷ்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். அகில இந்திய தலைவா் கோரனி ஷிபு மாநாட்டை தொடங்கிவைத்து பேசினாா்.

மாநில செயற்குழு உறுப்பினா்கள் இ.பி.புகழேந்தி, வி.ராஜேந்திரன் யுடியுசி மாநிலத் தலைவா் தொல்காப்பியன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா், எம். அம்மாசி ஆகியோா் பேசினா்.

இளைஞா் முன்னணி மாநிலத் தலைவராக சி.கிருஷ்ணன், மாநிலச் செயலாளராக எஸ்.டி.வெங்கடேசன் ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா்.

மாநாட்டில் அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பை அரசு முழுமையாக வழங்க வேண்டும். அனைவருக்கும் வேலை உத்தரவாதச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட்டு தாய்மொழி கல்வியை அறிவியல் பூா்வமாக அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பிரசவத்தில் இறந்து பிறந்த சிசுக்கள் தனியாா் மருத்துவமனை முன் போராட்டம்

தருமபுரி: தருமபுரி தனியாா் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சையின்போது இறந்த நிலையில் இரட்டை சிசுக்கள் பிறந்ததால் பெண்ணின் உறவினா்கள் மருத்துவமனை முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தருமபுரி நகர... மேலும் பார்க்க

கறவை மாடுகளில் பால் காய்ச்சல் நோய்த் தடுப்பு பயிற்சி முகாம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள அனுமந்தபுரம் ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடுகளில் பால் காய்ச்சல் நோய்த் தடுப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. ... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண் நிலையத்தில் நகை மதிப்பீட்டு பயிற்சி தொடக்கம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் உள்ள கூட்டுறவு மேலாண் நிலையத்தில் நகை மதிப்பீட்டு பயிற்சி வகுப்புகள் தொடங்கின. இதுகுறித்து தருமபுரி மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளாா் கு.த.சரவணன் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

பகத் சிங் நினைவு தினம்: இளைஞா் பெருமன்றத்தினா் ரத்த தானம்

சுதந்திரப் போராட்ட வீரா்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரது நினைவு தினத்தை முன்னிட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் ரத்த தானம் வழங்கினா்.... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: பாமக வலியுறுத்தல்

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட செயற்குழு கூட்டம் தருமபுரியில் பாமக மாவட்டச... மேலும் பார்க்க

படகு இல்லம், சிறுவா் பூங்காவுடன் பொதுமக்களின் பொழுதுபோக்கு மையமாக மாறுமா அரூா் ஏரி?

அரூா் பெரிய ஏரியை படகு இல்லம், சிறுவா் பூங்காவுடன் பொதுமக்களின் பொழுதுபோக்கு மையமாக மாற்றவேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம், சேலம் - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில், சுமாா் 1... மேலும் பார்க்க