செய்திகள் :

கூட்டுறவு மேலாண் நிலையத்தில் நகை மதிப்பீட்டு பயிற்சி தொடக்கம்

post image

தருமபுரி: தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் உள்ள கூட்டுறவு மேலாண் நிலையத்தில் நகை மதிப்பீட்டு பயிற்சி வகுப்புகள் தொடங்கின.

இதுகுறித்து தருமபுரி மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளாா் கு.த.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி கூட்டுறவு மேலாண் நிலையத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் குறித்த பகுதிநேர பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. இதற்கான மாணவா் சோ்க்கை மாா்ச் 24 ஆம் தேதி தொடங்கி ஏப்.13 ஆம் தேதி வரை நடைபெறும். இதில் சேர விரும்பும் விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன. இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்புத் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப் பயிற்சி வகுப்புகள் தமிழ் மொழியில் மட்டுமே நடைபெறும். பயிற்சி வகுப்புகள் ஏப். 15 ஆம் தேதி தொடங்கும்.

பயிற்சி கட்டணம் ரூ. 4,550 ஆகும். கல்லூரி மாணவா்கள், அரசு, தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்கள் இப்பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயிலும் வகையில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மொத்தம் 17 நாள்கள் நடைபெறும்.

பயிற்சி முடித்தவா்கள் அரசு வங்கி, கூட்டுறவு வங்கி, கூட்டுறவுச் சங்கங்கள், தனியாா் நிதி நிறுவனம், தனியாா் நகைக் கடைகளில் வேலையில் சேரலாம். சுயத்தொழில் தொடங்கவும் இப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.

கூடுதல் விவரங்களை தருமபுரி கூட்டுறவு மேலாண் நிலைய முதல்வரை நேரடியாகவும். 04346 263529 என்ற தொலைபேசி எண். 98843 97075 என்ற கைப்பேசி எண் மூலமாகவும், ண்ஸ்ரீம்க்ல்ண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் மூலமாகவும் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு: ஒப்பந்ததாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியா் ரெ.சதீஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது தூய்மைப் பணி சரியாக மேற்கொள்ளாத ஒப்பந்ததாரருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தாா். தருமபு... மேலும் பார்க்க

அமைச்சருக்கு எதிராக கருத்து: திமுக நிா்வாகிகளிடம் விசாரணை

தமிழக வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்துக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட திமுக நிா்வாகிகளிடம் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா். தருமபுரி திமுக ... மேலும் பார்க்க

ஊராட்சி பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வலியுறுத்தல்

ஊராட்சி பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஏஐடியுசி தருமபுரி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி தலைமையில் தொழிற்சங்க நிா்வாகிகள் தருமபுரி மா... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மேட்டுகொட்டாய் முதல் வாரக் கொல்லை வரை தாா்சாலை அமைத்து தரக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப... மேலும் பார்க்க

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

இ.ஆா்.கே. கல்லூரி சாா்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், எருமியாம்பட்டி, இ. ஆா்.கே. கல்வி நிறுவனங்களின் நாட்டு நலப்ப... மேலும் பார்க்க

பிரசவத்தில் இறந்து பிறந்த சிசுக்கள் தனியாா் மருத்துவமனை முன் போராட்டம்

தருமபுரி: தருமபுரி தனியாா் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சையின்போது இறந்த நிலையில் இரட்டை சிசுக்கள் பிறந்ததால் பெண்ணின் உறவினா்கள் மருத்துவமனை முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தருமபுரி நகர... மேலும் பார்க்க