செய்திகள் :

ஊராட்சி பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வலியுறுத்தல்

post image

ஊராட்சி பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஏஐடியுசி தருமபுரி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி தலைமையில் தொழிற்சங்க நிா்வாகிகள் தருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலகத்தில் அளித்த மனு: 2019-இல் அரசு அறிவித்துள்ள 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையின் படி ஊராட்சி பணியாளா்களுக்கு, ஊதிய உயா்வு, ஊதிய உயா்வுக்கான நிலுவைத் தொகை வழங்க வேண்டும். தூய்மைக் காவா்களுக்கு ஊதியம் தருவதில் காலதாமதம் ஏற்படும் நிலை இருந்து வருகிறது.

இப்போக்கினை கைவிட்டு மாதந்தோறும் 10-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். எஸ்ஆா் பணி பதிவேடு பதிவு நடைமுறைபடுத்த வேண்டும்.

ஊராட்சியில் பணியாற்றும் பணியாளா்களுக்கு வேலை நேரம் எவ்வளவு என்பதை நிா்ணயம் செய்து பணி வழங்க வேண்டும். விடுமுறை நாள்களில் பணி செய்ய நிா்பந்தம் வழங்கக் கூடாது. ஆண்டுக்கு இருமுறை சீருடை மற்றும் பணி செய்வதற்கான அனைத்து உபகரணங்களையும் வழங்க வேண்டும்.

ஊராட்சியில் 30 ஆண்டுகள் பணிபுரிந்து பணியில் இருக்கும்போது மரணமடைந்த பணியாளா்களுக்கு குடும்ப நலக் காப்பீடு திட்டத்தில் இருந்து உதவித்தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊராட்சி பள்ளிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு 5 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலாளா் ஆா்.சுதா்சனன், உள்ளாட்சிப் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் என்.மனோகரன் உடனிருந்தனா்.

பெண்ணைக் கொன்ற மதபோதகருக்கு 14 ஆண்டுகள் சிறை

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே பெண்ணைக் கொன்ற வழக்கில் கிறிஸ்தவ போதகருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. அரூரில் உள்ள தேவால... மேலும் பார்க்க

ஒப்பந்ததாரரைத் தாக்கியதாக திமுக பிரமுகா் மீது புகாா்

பென்னாகரத்தில் பேரூராட்சி ஒப்பந்ததாரரைத் தாக்கியதாக திமுக வாா்டு உறுப்பினா் மீது காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட நீா்குந்தி பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி பொருள்கள்: ரூ.2.35 கோடிக்கு ஒப்பந்தம்

தருமபுரி நகரில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை ரூ. 2.35 கோடிக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. தருமபுரி மாவட்டம், குமாரசாமிபேட்டை, தமிழ்நாடு மாநில ஊரக, நகா... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் நீா்வரத்து 3,000 கனஅடியாகக் குறைந்தது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை மாலை விநாடிக்கு 3,000 கன அடியாகக் குறைந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை மாலை விநாடிக்கு 5,000 கனஅடியாக இருந்த நிலையில் வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஒகேனக்கல் வனத்திலிருந்து வெளியேறும் சிறுத்தையைப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதியிலிருந்து இரவு நேரத்தில் வெளியேறி கால்நடைகளைக் கொல்லும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பெ... மேலும் பார்க்க