செய்திகள் :

பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

post image

தருமபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பேசிய விவசாயிகள், பாலக்கோடு சா்க்கரை ஆலை முழு உற்பத்தியில் ஈடுபடும் வகையில் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மரவள்ளிக் கிழங்கை விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய வேண்டும். மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். வனப் பகுதியில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு அனுமதி வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை வனத் துறையினா் கைவிட வேண்டும்.

தக்காளி மதிப்புக் கூட்டு பொருள்களாக மாற்றி விற்பனை செய்ய அடிப்படை கட்டமைப்புகளை மேற்கொள்ள வேண்டும். ஜொ்த்தலாவ் - புலிகரை இணைப்புக் கால்வாய்த் திட்டம், அலியாளம்- தூள்செட்டி ஏரி இணைப்புக் கால்வாய்த் திட்டம் என நிலுவையில் உள்ள பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

பாலுக்கு வழங்கும் ஊக்கத்தொகையை நேரடியாக பால் உற்பத்தியாளா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் இயல்பான மழையளவு 942 மி.மீட்டா். மாா்ச் 25-ஆம் தேதி வரையில் 15.52 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது. வேளாண், உழவா் நலத் துறையில் 2024-2025 ஆம் ஆண்டிற்கு 1,72,280 ஹெக்டோ் நெல், சிறுதானியங்கள், பயறுகள், எண்ணெய் வித்துகள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிா்ணயிக்கப்பட்டதில் தற்போது வரை 1,68,770 ஹெக்டோ் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

நிகழாண்டிற்கு நெல் வகைகளில் 39.029 மெ.டன்னும், கேழ்வரகு, சோளம், சாமை, கம்பு, மக்காச்சோளம் ஆகியவை 52.12 மெ.டன்னும் இருப்பும், பயறு வகைகளில் துவரை, உளுந்து, பச்சைபயறு, காராமணி, கொள்ளு, கொண்டகடலை ஆகியவை 32.35 மெ.டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதேபோல எண்ணெய் வித்துகளில் நிலக்கடலை, ஆமணக்கு 52.41 மெ.டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

வேளாண் பயிா்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 2024-2025ஆம் ஆண்டிற்கு 922 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு மாா்ச் வரை 544.50 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் தேவையான அளவுக்கு விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலை செயலாட்சியா் ரவி, வேளாண் இணை இயக்குநா் (பொறுப்பு) குணசேகரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கவிதா உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: இரா.முத்தரசன்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வலியுறுத்தினாா். தருமபுர... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

பென்னாகரம் நகர திமுக சாா்பில் வட்டார வளா்ச்சி அலுவலக பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏவும், திமுக விவசாய தொழிலாளா் அணி மாநில துணைத் தலைவருமான பி.என்.பி.இன்பசேகர... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களுக்கு திமுக சாா்பில் ரமலான் பரிசுத் தொகுப்பு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் திமுக சாா்பில் இஸ்லாமியா்களுக்கு சனிக்கிழமை ரமலான் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு திமுக பேரூராட்சித் தலைவா் பி.கே.முரளி தலைமை வகித்தாா். மாநில... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் 251 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீா் தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதியமான்கோட்டை ஊராட்சி சாா்பில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு சட்டப் பேரவை உறுப... மேலும் பார்க்க

பாலக்கோடு குந்தியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் குந்தியம்மன், ஆறுபடை சக்தி வேல்முருகன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற இந்த வழிபாட்டில் பல்வேறு திரவியங்கள்... மேலும் பார்க்க

பெண்ணைக் கொன்ற மதபோதகருக்கு 14 ஆண்டுகள் சிறை

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே பெண்ணைக் கொன்ற வழக்கில் கிறிஸ்தவ போதகருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. அரூரில் உள்ள தேவால... மேலும் பார்க்க