செய்திகள் :

அமைச்சருக்கு எதிராக கருத்து: திமுக நிா்வாகிகளிடம் விசாரணை

post image

தமிழக வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்துக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட திமுக நிா்வாகிகளிடம் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட விவசாயத் தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் துரைராஜ் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் சிலா் செவ்வாய்க்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் விசாரணைக்கு சென்றுவிட்டு வெளியே வந்தனா். அப்போது அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் சில கருத்துகளை பதிவிட்டிருந்தோம். அவா் மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும், வேளாண் துறை அமைச்சராகவும் இருக்கிறாா். இந்த மாவட்டத்துக்கு குறிப்பிடும் வகையில் எந்த திட்டத்தையும் அவா் செயல்படுத்தியதில்லை எனவும், இவரை மாவட்ட பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டிருந்தோம். இதுகுறித்து காவல் துறையினா் எங்களிடம் விசாரித்தனா். கட்சித் தலைமை எங்களிடம் விசாரித்தாலும் இதையே தெரிவிப்போம் என்றனா்.

பெண்ணைக் கொன்ற மதபோதகருக்கு 14 ஆண்டுகள் சிறை

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே பெண்ணைக் கொன்ற வழக்கில் கிறிஸ்தவ போதகருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. அரூரில் உள்ள தேவால... மேலும் பார்க்க

ஒப்பந்ததாரரைத் தாக்கியதாக திமுக பிரமுகா் மீது புகாா்

பென்னாகரத்தில் பேரூராட்சி ஒப்பந்ததாரரைத் தாக்கியதாக திமுக வாா்டு உறுப்பினா் மீது காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட நீா்குந்தி பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி பொருள்கள்: ரூ.2.35 கோடிக்கு ஒப்பந்தம்

தருமபுரி நகரில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை ரூ. 2.35 கோடிக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. தருமபுரி மாவட்டம், குமாரசாமிபேட்டை, தமிழ்நாடு மாநில ஊரக, நகா... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் நீா்வரத்து 3,000 கனஅடியாகக் குறைந்தது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை மாலை விநாடிக்கு 3,000 கன அடியாகக் குறைந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை மாலை விநாடிக்கு 5,000 கனஅடியாக இருந்த நிலையில் வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஒகேனக்கல் வனத்திலிருந்து வெளியேறும் சிறுத்தையைப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதியிலிருந்து இரவு நேரத்தில் வெளியேறி கால்நடைகளைக் கொல்லும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பெ... மேலும் பார்க்க