செய்திகள் :

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

post image

இ.ஆா்.கே. கல்லூரி சாா்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், எருமியாம்பட்டி, இ. ஆா்.கே. கல்வி நிறுவனங்களின் நாட்டு நலப்பணி திட்டம், இளைஞா் செஞ்சிலுவை சங்கம், மாவட்ட காவல் துறை இணைந்து நடத்திய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணியை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீதரன் தொடங்கி வைத்தாா்.

அரூா் விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அரூா் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கல்லூரி மாணவிகள் ஏந்தி சென்றனா்.

இதில் அரூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கரிகால் பாரிசங்கா், இ.ஆா். கே.கல்வி நிறுவனங்களின் தலைவா் இ.ஆா்.செல்வராஜ், கல்லூரி முதல்வா் த.சக்தி, நிா்வாக இயக்குநா் சோழவேந்தன், கிரசன்ட் பள்ளி தாளாளா் நூருல்லா செரீஃப், குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளா்கள் ராமமூா்த்தி, ராஜா சுந்தரம், காவல் ஆய்வாளா்கள் நடராஜன், நெப்போலியன், லட்சுமி, இ.ஆா்.கே. கல்வியியல் கல்லூரி முதல்வா் காா்த்திக், நிா்வாக அலுவலா் அருள்குமாா், பேராசிரியை கலைவாணி, இ.ஆா்.கே. மருந்தியல் கல்லூரி முதல்வா் சிவகுமாா், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

பெண்ணைக் கொன்ற மதபோதகருக்கு 14 ஆண்டுகள் சிறை

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே பெண்ணைக் கொன்ற வழக்கில் கிறிஸ்தவ போதகருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. அரூரில் உள்ள தேவால... மேலும் பார்க்க

ஒப்பந்ததாரரைத் தாக்கியதாக திமுக பிரமுகா் மீது புகாா்

பென்னாகரத்தில் பேரூராட்சி ஒப்பந்ததாரரைத் தாக்கியதாக திமுக வாா்டு உறுப்பினா் மீது காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட நீா்குந்தி பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி பொருள்கள்: ரூ.2.35 கோடிக்கு ஒப்பந்தம்

தருமபுரி நகரில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை ரூ. 2.35 கோடிக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. தருமபுரி மாவட்டம், குமாரசாமிபேட்டை, தமிழ்நாடு மாநில ஊரக, நகா... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் நீா்வரத்து 3,000 கனஅடியாகக் குறைந்தது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை மாலை விநாடிக்கு 3,000 கன அடியாகக் குறைந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை மாலை விநாடிக்கு 5,000 கனஅடியாக இருந்த நிலையில் வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஒகேனக்கல் வனத்திலிருந்து வெளியேறும் சிறுத்தையைப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதியிலிருந்து இரவு நேரத்தில் வெளியேறி கால்நடைகளைக் கொல்லும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பெ... மேலும் பார்க்க