செய்திகள் :

தேர்தல் விதிகளை கடுமையாக்க டிரம்ப் உத்தரவு! குடியுரிமை இருந்தால் வாக்களிக்க அனுமதி!

post image

தேர்தல் விதிகளை கடுமையாக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு அனைவரையும் ஒரு பரபரப்பிலேயே வைத்துள்ளார். இந்த நிலையில், இனி அடுத்து நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல்களில் குடியுரிமைச் சான்று கட்டாயம் மற்றும் தேர்தல் நாளுக்கு முன்னதாகவே, வாக்குச் சீட்டுகள் கிடைக்கப் பெறுதல் உள்ளிட்ட தேர்தல் விதிகளை கடுமையாக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இதற்கு முந்தைய அமெரிக்க அரசு தேர்தல் நடத்துவதில் அடிப்படை மற்றும் தேர்தல் பாதுகாப்பை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ள அவர், மாநிலங்கள் அரசின் கொள்கைகளுக்கு இணங்கத் தவறினால், அரசின் நிதி கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்தல் விதிகள் மீது மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் இருப்பதால், இந்த உத்தரவு சட்ட ரீதியான சவால்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் முடிவுகளுக்கு முன்னர் இருந்தே அதிபர் டிரம்ப், தேர்தல் நடைமுறைகள் குறித்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தார். மேலும், 2020 ஆம் ஆண்டு தேர்தலில் ஜோ பைடனிடம் தான் தோல்வியடைந்ததற்கும் இந்த மோசடியே காரணம் எனத் தெரிவித்திருந்தார்.

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு குடியுரிமை அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், குடியுரிமை அல்லாமல் வாக்களிப்பது சட்டவிரோதமானது என்றும், அவர்கள் நாடு கடத்தப்படவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வருகிறார் மெஸ்ஸி!

உலக கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி ஆர்ஜென்டீனா அணியினருடன் வருகிற அக்டோபர் மாதம் இந்தியா வரவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கால்பந்து உலகக் கோப்பை சாம்பியனான ஆர்ஜென்டீனா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸ... மேலும் பார்க்க

தென்கொரியா காட்டுத் தீ: மீட்புப் பணி ஹெலிகாப்டர் விபத்து! விமானி பலி!

தென்கொரியாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட மீட்புப் பணி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தென் கொரியாவின் தெற்குப் பகுதிகளில் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றுடன... மேலும் பார்க்க

தென்கொரியாவில் காட்டுத் தீ: 16 பேர் பலி! 46,000 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை!

தென்கொரியாவில் பரவிய காட்டுத் தீயில் 16 பேர் பரிதாபமாக பலியாகினர்தென் கொரியாவின் தெற்குப் பகுதிகளில் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றுடன் ஏற்பட்ட காட்டுத்தீயில் 16 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், இ... மேலும் பார்க்க

10-ஆவது நாளாக யேமனில் அமெரிக்கா தாக்குதல்

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா 10-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 2 போ் உயிரிழந்தனா்; ஏராளமானவா்கள் காயமடைந்தனா். ஏவுகணை படைப் ... மேலும் பார்க்க

காஸா: இஸ்ரேல் குண்டுவீச்சில் மேலும் 23 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் மேலும் 23 போ் உயிரிழந்தனா். காஸா போா் நிறுத்தம் முறிந்ததைத் தொடா்ந்து அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடா்ந்து 8-ஆவது நாளாக திங்கள்கிழமை நள்... மேலும் பார்க்க

கருங்கடல் போா் நிறுத்தத்துக்கு ரஷியா-உக்ரைன் ஒப்புதல்: அமெரிக்கா

கருங்கடல் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்ள ரஷியாவும் உக்ரைனும் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கருங்கடல் ... மேலும் பார்க்க