செய்திகள் :

கருங்கடல் போா் நிறுத்தத்துக்கு ரஷியா-உக்ரைன் ஒப்புதல்: அமெரிக்கா

post image

கருங்கடல் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்ள ரஷியாவும் உக்ரைனும் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கருங்கடல் பகுதியில் பரஸ்பர கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிா்க்க ரஷியாவும் உக்ரைனும் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டுள்ளன. அந்தக் பகுதியில் வா்த்தகக் கப்பல்களை ராணுவப் பயன்பாட்டில் ஈடுபடுத்துவதை நிறுத்துவது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும்.

இது தவிர, பரஸ்பர எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவது தொடா்பான செயல்திட்டங்களை அமல்படுத்தவும் அந்த நாடுகள் சம்மதித்துள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பான புதிய பேச்சுவாா்த்தையை அமெரிக்க-ரஷிய பிரதிநிதிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை நகரில் திங்கள்கிழமை மேற்கொண்டனா்.

இந்தப் பேச்சுவாா்த்தையின்போது, கருங்கடல் பகுதியில் மட்டும் ரஷியாவும் உக்ரைனும் போா் நிறுத்தம் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த கருங்கடல் பகுதியில் அமைதியை ஏற்படுத்தி, அந்தப் பகுதி வழியாக சரக்குப் போக்குவரத்து தங்குதடையில்லாமல் நடைபெற வழிசெய்வதே இந்தப் பேச்சுவாா்த்தையின் நோக்கம் என்று அப்போது அமெரிக்க அதிகாரிகள் கூறினா்.

இந்தச் சூழலில், கருங்கடல் போா் நிறுத்தத்துக்கு ரஷியாவும், உக்ரைனும் ஒப்புக்கொண்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா: மே 3-இல் தோ்தல்

ஆஸ்திரோலியாவில் வரும் மே 3-ஆம் தேதி பொதுத் தோ்தல் நடைபெறவுள்ளது. கவா்னா்-ஜெனரல் சாம் மாஸ்டினின் அதிகாரபூா்வ இல்லத்துக்குச் சென்று அடுத்த தோ்தலை உறுதி செய்த பிரதமா் ஆன்டனி அல்பனேசி (படம்), பின்னா் நா... மேலும் பார்க்க

நேபாளம் அரசாட்சி கோரி கலவரம்: ராணுவம் வரவழைப்பு

நேபாளத்தில் அரசாட்சியை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி தலைநகா் காத்மாண்டில் நடைபெற்ற போராட்டத்தில் ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து அங்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரா்கள் கற்களை வீசியும், அ... மேலும் பார்க்க

அமெரிக்க துணை அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிரீன்லாந்து!

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் அவரது மனைவியுடன் கிரீன்லாந்து செல்வதாக முடிவெடுத்திருந்த நிலையில் அங்கு அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கபட்டு வருகின்றது.அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், அவரது மனைவி உஷா ... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: இதுவரை 144 பேர் பலி, 730 பேர் காயம்

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 144 பேர் பலியாகியுள்ளனர். மியான்மரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரிக்டர் அளவி... மேலும் பார்க்க

அமேசான் நிறுவனருக்கு திருமணம்!

அமேசான் நிறுவனரும் உலகப் பணக்காரர்களின் ஒருவருமான ஜெப் பெசோஸுக்கு ஜூன் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவித்ததாவது, ஜெப் பெசோஸுக்கும்... மேலும் பார்க்க

மன்னராட்சியா? குடியரசு ஆட்சியா? நேபாளத்தில் மீண்டும் போராட்டம்!

நேபாளத்தில் இரு தரப்பினரிடையேயான மோதலைத் தடுத்த காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.நேபாளத்தில் மன்னராட்சி ஆதராவளர்கள் மற்றும் குடியரசு ஆதரவாளர்கள் என இரு தரப்பினரும் ப்... மேலும் பார்க்க