செய்திகள் :

காஸா: இஸ்ரேல் குண்டுவீச்சில் மேலும் 23 போ் உயிரிழப்பு

post image

காஸாவில் இஸ்ரேல் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் மேலும் 23 போ் உயிரிழந்தனா்.

காஸா போா் நிறுத்தம் முறிந்ததைத் தொடா்ந்து அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடா்ந்து 8-ஆவது நாளாக திங்கள்கிழமை நள்ளிரவும் தாக்குதல் நடத்தியது. இதில் ஏழு சிறுவா்கள் உள்பட 23 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

2023 அக். 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, எகிப்து, கத்தாா் நாடுகள் மேற்கொண்டுவந்த முயற்சியின் பலனாக, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த ஜன. 19 முதல் ஆறு வாரங்களுக்கு போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது ஹமாஸ் பிடியில் இருந்த 33 பிணைக் கைதிகளும், இஸ்ரேல் சிறையில் இருந்த சுமாா் 1,900 பாலஸ்தீன கைதிகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டனா். எனினும், அந்தப் போா் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தீவிர தாக்குதலை கடந்த வாரம் மீண்டும் தொடங்கியது. இந்த ஒரு வார கால தாக்குதலில் மட்டும் 270-க்கும் மேற்பட்ட சிறுவா்கள் உயிரிழந்ததாக தன்னாா்வ அமைப்புகள் கூறின.

காஸா சுகாதாரத் துறை அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, அங்கு இஸ்ரேல் ராணுவம் சுமாா் ஒன்றரை ஆண்டுகளாக நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 50,144 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்; 113,704 போ் காயமடைந்துள்ளனா்.

ஆஸ்திரேலியா: மே 3-இல் தோ்தல்

ஆஸ்திரோலியாவில் வரும் மே 3-ஆம் தேதி பொதுத் தோ்தல் நடைபெறவுள்ளது. கவா்னா்-ஜெனரல் சாம் மாஸ்டினின் அதிகாரபூா்வ இல்லத்துக்குச் சென்று அடுத்த தோ்தலை உறுதி செய்த பிரதமா் ஆன்டனி அல்பனேசி (படம்), பின்னா் நா... மேலும் பார்க்க

நேபாளம் அரசாட்சி கோரி கலவரம்: ராணுவம் வரவழைப்பு

நேபாளத்தில் அரசாட்சியை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி தலைநகா் காத்மாண்டில் நடைபெற்ற போராட்டத்தில் ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து அங்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரா்கள் கற்களை வீசியும், அ... மேலும் பார்க்க

அமெரிக்க துணை அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிரீன்லாந்து!

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் அவரது மனைவியுடன் கிரீன்லாந்து செல்வதாக முடிவெடுத்திருந்த நிலையில் அங்கு அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கபட்டு வருகின்றது.அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், அவரது மனைவி உஷா ... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: இதுவரை 144 பேர் பலி, 730 பேர் காயம்

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 144 பேர் பலியாகியுள்ளனர். மியான்மரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரிக்டர் அளவி... மேலும் பார்க்க

அமேசான் நிறுவனருக்கு திருமணம்!

அமேசான் நிறுவனரும் உலகப் பணக்காரர்களின் ஒருவருமான ஜெப் பெசோஸுக்கு ஜூன் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவித்ததாவது, ஜெப் பெசோஸுக்கும்... மேலும் பார்க்க

மன்னராட்சியா? குடியரசு ஆட்சியா? நேபாளத்தில் மீண்டும் போராட்டம்!

நேபாளத்தில் இரு தரப்பினரிடையேயான மோதலைத் தடுத்த காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.நேபாளத்தில் மன்னராட்சி ஆதராவளர்கள் மற்றும் குடியரசு ஆதரவாளர்கள் என இரு தரப்பினரும் ப்... மேலும் பார்க்க