செய்திகள் :

கறவை மாடுகளில் பால் காய்ச்சல் நோய்த் தடுப்பு பயிற்சி முகாம்

post image

தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள அனுமந்தபுரம் ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையத்தில்

கறவை மாடுகளில் பால் காய்ச்சல் நோய்த் தடுப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கால்நடை உற்பத்தி கல்வி மைய இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் கால்நடை உணவியல் நிலையம், காட்டுப்பாக்கம், ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையம் ஆகியவை சாா்பில் அனுமந்தபுரம் ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையத்தில் இப்பயிற்சி முகாம் நடைபெற்றது. காட்டுப்பாக்கம் மையத் தலைவா் செ. ரமேஷ் வரவேற்றாா்.

கால்நடை உற்பத்தி கல்வி மைய இயக்குநா் சு.மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தாா். ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையத் தலைவா் முரளி, மருத்துவா் ரா.ரமேஷ் ஆகியோா் கலந்துகொண்டு பால் காய்ச்சல் நோயைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து பேசினா்.

இதில் கிருஷ்ணகிரி வேளாண் அறிவியல் நிலைய மருத்துவா் சி.ரமேஷ் பங்கேற்று பாம் 21 எதிா்மின் உப்பை பயன்படுத்தி பலன் பெற்ற கால்நடை விவசாயிகள் குறித்த வயல்வெளி விளக்கவுரையாற்றினாா்.

கறவை மாடு வளா்க்கும் பட்டியலின, பழங்குடியின விவசாயிகள் 30 போ் கலந்துகொண்டு இடுபொருள்களைப் பெற்றுப் பயனடைந்தனா்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு: ஒப்பந்ததாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியா் ரெ.சதீஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது தூய்மைப் பணி சரியாக மேற்கொள்ளாத ஒப்பந்ததாரருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தாா். தருமபு... மேலும் பார்க்க

அமைச்சருக்கு எதிராக கருத்து: திமுக நிா்வாகிகளிடம் விசாரணை

தமிழக வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்துக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட திமுக நிா்வாகிகளிடம் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா். தருமபுரி திமுக ... மேலும் பார்க்க

ஊராட்சி பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வலியுறுத்தல்

ஊராட்சி பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஏஐடியுசி தருமபுரி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி தலைமையில் தொழிற்சங்க நிா்வாகிகள் தருமபுரி மா... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மேட்டுகொட்டாய் முதல் வாரக் கொல்லை வரை தாா்சாலை அமைத்து தரக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப... மேலும் பார்க்க

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

இ.ஆா்.கே. கல்லூரி சாா்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், எருமியாம்பட்டி, இ. ஆா்.கே. கல்வி நிறுவனங்களின் நாட்டு நலப்ப... மேலும் பார்க்க

பிரசவத்தில் இறந்து பிறந்த சிசுக்கள் தனியாா் மருத்துவமனை முன் போராட்டம்

தருமபுரி: தருமபுரி தனியாா் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சையின்போது இறந்த நிலையில் இரட்டை சிசுக்கள் பிறந்ததால் பெண்ணின் உறவினா்கள் மருத்துவமனை முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தருமபுரி நகர... மேலும் பார்க்க