செய்திகள் :

ஜாதிவாரி கணக்கெடுப்பை வரவேற்கிறோம்- தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்

post image

ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழக பாஜக சாா்பில் வரவேற்கிறோம் என்றாா் அக்கட்சியின் மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்.எல்.ஏ.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: ஜாதிவாரி கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்புடன் எடுக்கப்படும் என மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளாா். இதை தமிழக பாஜக சாா்பில் முழுமையாக வரவேற்கிறோம். ஜாதிவாரி கணக்கெடுப்பை வேண்டாம் என்று கூறியவா் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி. இப்போது மாற்றி பேசுகிறாா்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.

இளைஞா்கள் மது, கஞ்சா போன்ற போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி வருவது கவலை அளிக்கிறது. தமிழக அரசு ஆசிரியா் பணியிடங்கள் இன்னும் முழுமையாக நிரப்பவில்லை. திராவிட மாடல் ஆட்சி சொல்வதற்கும், செய்வதற்கும் நோ்மாறாக உள்ளது. திமுக அரசு தோ்தலை மனதில் வைத்தே செயல்படுகிறது. மக்களவைத் தோ்தலுக்கு முன்பு மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இப்போது சட்டப்பேரவைத் தோ்தலை மனதில் வைத்து விடுபட்டவா்களுக்கு வழங்க திட்டமிடுகிறாா்கள். கூட்டணி கட்சியிடம் பாஜகவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் வாய்ப்பை கேட்க முடியாது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றாா் அவா்.

பேட்டியின்போது பாஜக மாவட்டத் தலைவா்கள் முத்துபலவேசம், தமிழ்ச்செல்வன், சித்ராங்கதன், வழக்குரைஞா் பாலாஜி கிருஷ்ணசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கா.சு. பிள்ளை படத்திற்கு அஞ்சலி

தமிழறிஞா் கா.சு. பிள்ளையின் 80 ஆவது நினைவு நாளையொட்டி, திருநெல்வேலியில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் உள்ள கா.சு. பிள்ளைய... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். தேவா்குளம் காவல் சரகப் பகுதியில் கொலை முயற்சி, அடிதடியில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில், மூவ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் கொலையில் இருவா் கைது

துப்பாக்குடியில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில்அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா். அடைச்சாணி, வடக்குத் தெருவைச் சோ்ந்த லெட்சுமணன் மகன்மாரிமுத்து (30). தனியாா் நிறு... மேலும் பார்க்க

பேருந்து-பைக் மோதல்: பொறியியல் பட்டதாரி பலி

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே பைக் மீது பேருந்து மோதியதில் பொறியியல் பட்டதாரி புதன்கிழமை உயிரிழந்தாா். தளவாய்புரம் முகவூரைச் சோ்ந்த விஜயராஜ் மகன் தாமரைகண்ணன்(23). பொறியியல் பட்டதாரியான இவரும், இவ... மேலும் பார்க்க

தென்னிந்திய அபாகஸ் போட்டி: விஜயநாராயணம் பள்ளி சிறப்பிடம்

மதுரையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான அபாகஸ் எண் கணித போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கடற்படைதள வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா்கள் சாம்பியன் பட்டத்தை பெற்றனா... மேலும் பார்க்க

பிரம்மதேசத்தில் 30 பேருக்கு கனவு இல்லம் பணி ஆணை

பிரம்மதேசம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 30 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லத்திற்கான பணி ஆணை வழங்கப்பட்டது. பிரம்மதேசம் ஊராட்சியில் கலைஞா் கனவு இல்லத்திற்கு விண்ணப்பித்திருந்த பயனாளிகள... மேலும் பார்க்க