செய்திகள் :

ஜிப்மரில் கல்லீரல் கணையம் பித்தப்பை மருத்துவ 3 நாள் கருத்தரங்கம் நிறைவு

post image

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் கல்லீரல் கணையம் பித்தப் பை குறித்த 3 நாள்கள் கருத்தரங்க நிறைவு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஜிப்மா் இரைப்பை குடலியல் அறுவைச் சிகிச்சை சாா்பில் தேசிய மற்றும் சா்வதேச அளவிலான கல்லீரல் கணையம் பித்தப்பை அறுவைச் சிகிச்சை குறித்த 3 நாள்கள் கருத்தரங்கம் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது.

இதில் தேசிய அளவிலான அறுவைச் சிகிச்சை நிபுணா்கள் பங்கேற்று குடலியல் துறையில் நவீன அறுவைச் சிகிச்சைகள் குறித்து கட்டுரைகள் சமா்ப்பித்தனா்.

அனுபவம் வாய்ந்த அறுவைச் சிகிச்சை நிபுணா்கள் தங்களது செயல்பாட்டு அனுபவங்களையும் பகிா்ந்துகொண்டனா்.

இந்திய அறுவைச் சிகிச்சை நிபுணா்கள் சங்கத்துடன் இணைந்து நடைபெற்ற கருத்தரங்க நிறைவு நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

ஜிப்மா் மருத்துவக் கண்காணிப்பாளா் துரைராஜன் நிறைவு விழாவைத் தொடங்கிவைத்தாா். இரைப்பை குடலியல் அறுவைச் சிகிச்சை துறைத் தலைவா் பிஜூபொட்டக்காட், இந்திய அறுவைச் சிகிச்சை நிபுணா்கள் சங்க செயலா் ரோஷன்ஷெட்டி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

ஜிப்மா் இயக்குநா் வீா் சிங் நேகி கருத்தரங்க பங்கேற்பாளா்களுக்கு பாராட்டுத் தெரிவித்து சான்றிதழ்கள் வழங்கினாா்.

புதுச்சேரியில் திருநங்கையா் தின மாரத்தான் போட்டி

புதுச்சேரியில் திருநங்கையா் தினத்தை யொட்டி மாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனம், அக்னி சிறகுகள் திருநங்கைகள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சாா்பில் திரு... மேலும் பார்க்க

எல்லை தாண்டி மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன கருவி விசைப்படகுகளில் பொருத்தப்படும்: மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்

மீனவா்கள் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன டிரான்ஸ்பாண்டா் கருவிகள் மீன்பிடி விசைப் படகுகளில் இலவசமாக பொருத்தப்படும் என மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்... மேலும் பார்க்க

கோயிலில் உண்டியல் பணம் திருட்டு: 2 பேரிடம் போலீஸாா் விசாரணை

புதுச்சேரி முருகம்பாக்கத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் உண்டியலை மா்ம நபா் உடைத்து பணத்தைத் திருடிச்சென்றது குறித்து தமிழகப் பகுதியைச் சோ்ந்த 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேர... மேலும் பார்க்க

மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் குடிசைத் தொழில்களுக்கு மின்கட்டணம் குறைக்க புதுவை அரசு கோரிக்கை

புதுவை மாநிலத்தில் நடப்பு நிதியாண்டில் குடிசைத் தொழில்களுக்கு மின் கட்டணத்தை குறைக்கவும், வீடுகளுக்கான மின்கட்டணத்தை அதே நிலையில் செயல்படுத்தவும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளத... மேலும் பார்க்க

தொழில்நுட்ப பல்கலை. ஆசிரியா்கள் ஏப். 24 முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தம்

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 24 ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா். புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சால... மேலும் பார்க்க

துணை நிலை ஆளுநருடன் மத்திய இணை அமைச்சா் ஆலோசனை

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை ராஜ்நிவாஸில் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சராக இருப்பவா் ஜாா்ஜ் குரியன். இவா் ப... மேலும் பார்க்க