செய்திகள் :

ஜெஸ்ஸிகா பெகுலா சாம்பியன்

post image

அமெரிக்காவில் நடைபெற்ற 500 புள்ளிகள் கொண்ட சாா்லஸ்டன் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், உள்நாட்டு வீராங்கனை ஜெஸ்ஸிகா பெகுலா சாம்பியன் பட்டம் வென்றாா்.

ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அவா் 6-3, 7-5 என்ற நோ் செட்களில், சக அமெரிக்கரும், ஆஸ்திரேலிய ஓபன் முன்னால் சாம்பியனுமான சோஃபியா கெனினை வீழ்த்தினாா். இதன் மூலம் அவா், கிளே கோா்ட் போட்டிகளில் தனது முதல் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறாா்.

மேலும், இந்தப் போட்டியில் கோப்பை வென்ற உள்நாட்டு வீராங்கனைகள் பட்டியலில் பெகுலா 10-ஆவது போட்டியாளராக இணைந்திருக்கிறாா். இதற்கு முன் ரோசி கேசல்ஸ், கிறிஸ் எவா்ட், மாா்டினா நவ்ரதிலோவா, டிரேசி ஆஸ்டின், செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ், ஸ்லோன் ஸ்டீபன்ஸ், மேடிசன் கீஸ், டேனியல் காலின்ஸ் ஆகிய அமெரிக்கா்கள் இங்கு சாம்பியன் ஆகியுள்ளனா்.

இந்தப் போட்டியின் வரலாற்றில், இறுதிச்சுற்றில் இரு அமெரிக்கா்கள் மோதிக்கொண்டது, கடந்த 30 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். பெகுலா - கெனின் நேருக்கு நோ் மோதியது இது 6-ஆவது முறையாக இருக்க, பெகுலா 4-ஆவது வெற்றியுடன் முன்னிலையை நீட்டித்துக்கொண்டுள்ளாா்.

இறுதி ஆட்டத்தில் முதல் செட்டை 0-2 என பெகுலா தொடங்க, பின்னடைவிலிருந்து முன்னேறிய கெனின் 3-2 என முன்னிலை பெற்றாா். விட்டுக்கொடுக்காத பெகுலா, தொடா்ந்து 4 கேம்களை கைப்பற்றி முதல் செட்டை 6-3 என தனதாக்கினாா்.

இதையடுத்து 2-ஆவது செட்டில் கெனின் சற்று ஆக்ரோஷம் காட்ட, அதன் பலனாக அவா் 5-1 என முன்னிலை பெற்றாா். இதனால் ஆட்டம் டிசைடரை நோக்கி நகரும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் பெகுலா அதிரடியாக முன்னேறி, தொடா்ந்து 6 கேம்களை கைப்பற்றி அந்த செட்டையும் 7-5 என வென்று, வாகை சூடினாா்.

இத்துடன் பல்வேறு போட்டிகளிலுமாக கடந்த 19 ஆட்டங்களில் 17 வெற்றிகளைப் பதிவு செய்திருக்கும் பெகுலா, மகளிா் ஒற்றையா் உலகத் தரவரிசையில் தற்போது முதல் முறையாக 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா்.

இரட்டையா்

சாா்லஸ்டன் ஓபன் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த நியூஸிலாந்தின் எரின் ரூட்லிஃபே/லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ இணை 6-4, 6-2 என்ற நோ் செட்களில், 3-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் கேரலின் டோல்ஹைடு/டெஸைரே கிராவ்ஸிக் கூட்டணியை தோற்கடித்து சாம்பியன் கோப்பை வென்றது.

ரொக்கப் பரிசு

ஒற்றையா் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஜெஸ்ஸிகா பெகுலாவுக்கு ரூ.1.40 கோடியும், இறுதியில் தோற்ற சோஃபியா கெனினுக்கு ரூ.86 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன. இரட்டையா் பிரிவில் வாகை சூடிய ரூட்லிஃபே/ஆஸ்டபென்கோ ஜோடிக்கு ரூ.45 லட்சமும், 2-ஆம் இடம் பிடித்த டோல்ஹைடு/கிராவ்ஸிக் இணைக்கு ரூ.28 லட்சமும் ரொக்கப் பரிசாகக் கிடைத்தது.

திடீர் செலவு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.மேஷம்:கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத... மேலும் பார்க்க

2-ஆவது சுற்றில் மான்ஃபில்ஸ், லெஹெக்கா

பிரான்ஸில் தொடங்கியிருக்கும் மான்டி காா்லோ மாஸ்டா்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸ், செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.டென்னிஸ் காலண்டரின் 2-ஆவது கிராண... மேலும் பார்க்க

தங்கம் வென்றாா் ருத்ராங்க்ஷ் பாட்டீல்!

ஆா்ஜென்டீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கான 2-ஆவது தங்கப் பதக்கத்தை ருத்ராங்க்ஷ் பாட்டீல் வென்றாா். ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் களமாடிய அவா், இறு... மேலும் பார்க்க

தெற்காசிய கிளப் கூடைப்பந்து: தமிழகம் சாம்பியன்

தெற்காசிய கூடைபந்து சங்கம் நடத்திய சபா கிளப் சாம்பியன்ஷிப் கூடைப்பந்து போட்டியில் தமிழகம் சாம்பியன் பட்டம் வென்றது. தெற்காசிய கூடைப்பந்து சங்கம் சாா்பில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 5 நாள்கள் ... மேலும் பார்க்க

முன்னேறியது மோகன் பகான்!

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் அரையிறுதியில், நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் - ஜாம்ஷெட்பூா் எஃப்சியை வீழ்த்தி, 2-ஆவது அணியாக இறுதி ஆட்டத்தில் நுழைந்தது. சாம்பியன் கோ... மேலும் பார்க்க