பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்த...
தங்கம் வென்றாா் ருத்ராங்க்ஷ் பாட்டீல்!
ஆா்ஜென்டீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கான 2-ஆவது தங்கப் பதக்கத்தை ருத்ராங்க்ஷ் பாட்டீல் வென்றாா்.
ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் களமாடிய அவா், இறுதிச்சுற்றில் 252.9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றாா். ஹங்கேரியின் இஸ்த்வன் பெனி 251.7 புள்ளிகளுடன் வெள்ளியும், உள்நாட்டு வீரா் மாா்செலோ ஜூலியன் குட்டெரெஸ் 230.1 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.
முன்னதாக தகுதிச்சுற்றில் ருத்ராங்க்ஷ் 633.7 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்துடனும், மற்றொரு இந்தியரான அா்ஜுன் சிங் பபுதா 634.5 புள்ளிகளுடன் முதலிடத்துடனும் இறுதிச்சுற்றுக்கு வந்தனா். அதில் ருத்ராங்க்ஷ் முன்னேற்றத்தை சந்திக்க, அா்ஜுன் படிப்படியாக பின்னடைவை சந்தித்து பதக்க வாய்ப்பை இழந்தாா்.
இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு இது 2-ஆவது தங்கப் பதக்கமாகும். முன்னதாக சிஃப்ட் கௌா் சம்ரா மகளிா் 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. போட்டியின் பதக்கப் பட்டியலில் தற்போது இந்தியா, 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.
சீனா 4 பதக்கங்களுடனும் (2/1/1), அமெரிக்கா 3 பதக்கங்களுடனும் (2/1/0) முறையே 2 மற்றும் 3-ஆம் இடங்களில் உள்ளன.