குரூப் 4 தோ்வு முடிவு 3 மாதத்தில் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி தலைவர்
டிசிஎஸ் பங்குகள் 2.51% சரிவு!
புதுதில்லி: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 2.51 சதவிகிதம் சரிவுடன் முடிவடைந்தன.
நிறுவனத்தின் ஜூன் முடிய உள்ள காலாண்டு வருவாய் முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தத் தவறியதால் பங்குகள் விலை சரிந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
பிஎஸ்இ-யில் 2.43 சதவிகிதம் சரிந்து ரூ.3,300 ஆக இருந்தது. அதே வேளையில் என்எஸ்இ-யில் 2.51 சதவிகிதம் குறைந்து ரூ.3,297 ஆக முடிவடைந்தது. இதனையடுத்து இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, எச்சிஎல் டெக் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவன பங்குகளும் விறப்பனை அழுத்தத்தை சந்தித்தது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள் 6 சதவிகித லாப உயர்வுடன் சந்தை எதிர்பார்ப்புகளை முறியடித்தன. இருப்பினும் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக உற்சாகம் குறைந்தது.
நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நேற்று ஜூன் மாதம் வரையான காலாண்டு நிகர லாபம் 6 சதவிகித வளர்ச்சியடைந்து ரூ.12,760 கோடியாக உள்ளது என்றது.
டிசிஎஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள், ஐடி நிறுவனங்களுக்கு, குறிப்பாக பெரிய நிறுவனங்களுக்கு, தொடர்ச்சியான போராட்டத்தை சந்திக்க நேரிடும். இருப்பினும், ஐடி மிட்கேப் குறியீடுகள் சிறப்பாகச் செயல்பட்டது.
இதையும் படிக்க: க்ளென்மார்க் பார்மா பங்குகள் 10% உயர்வுடன் நிறைவு!
TCS dropped 2.51 per cent today after its June quarter earnings failed to enthuse investors.