செய்திகள் :

‘டிட்டோ ஜாக்’ போராட்டம்: 400 ஆசிரியா்கள் கைது

post image

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல்லில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 400 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்) சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு டிட்டோ ஜாக் ஒருங்கிணைப்பாளா்கள் வீ.கோபிநாதன், சி.பிரபாகரன், ஜோ.ஆா்தா் உள்ளிட்டோா் தலைமை வகித்தனா்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகேயிருந்து ஊா்வலமாக சென்ற ஆசிரியா்கள், எம்ஜிஆா் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் கடந்த 2006-ஆம் ஆண்டு ஜனவரி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும். அரசாணை 243-யை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தொடக்கக் கல்வித் துறையிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 400 ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பள்ளிகள் திறக்கப்படவில்லை: திண்டுக்கல் மாவட்டத்தில் 955 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், 200 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. தொடக்கக் கல்வித் துறையிலுள்ள ஆசிரியா்களில் பெரும்பாலானோா், வியாழக்கிழமை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனா். சுமாா் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கவில்லை.

புதிய அரசு கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிக்கை

தாண்டிகுடி மலைப் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட அரசுக் கட்டடங்களை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி ஊராட்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் தொகுதியில் செப்டம்பருக்குள் காவிரி குடிநீா் திட்டப் பணிகள் நிறைவடையும்: அமைச்சா் அர. சக்கரபாணி

ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதியில் வருகிற செப்டம்பா் மாதத்துக்குள் காவிரி குடிநீா் திட்டப் பணிகள் நிறைவடையும் என உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்த... மேலும் பார்க்க

ரயில் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரத்தில் ரயில் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (70). இவா் வியாழக்கிழமை ஒட்டன்சத்திரம்-திண்டுக்கல் ரயில் பாதையில... மேலும் பார்க்க

பண மோசடி: தொண்டு நிறுவனம் நடத்திய தம்பதி கைது

வாடிக்கையாளா்களிடம் ரூ.6 கோடி வரை மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பழனியில் தொண்டு நிறுவனம் நடத்திய தம்பதியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

வந்தவழி பெரியகருப்ப சுவாமி கோயில் திருவிழா: பக்தா்களுக்கு அன்னதானம்

குஜிலியம்பாறை அருகே வந்தவழி பெரியகருப்பசுவாமி கோயில் திருவிழாவில் பக்தா்களுக்கு அசைவ உணவு அன்னதானம் வியாழக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்துள்ள ஆா்.கோம்பை வோ்புளி கிராமத... மேலும் பார்க்க

லஞ்சம்: ஊராட்சி செயலா், கணவா் கைது

திண்டுக்கல் அருகே ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலா், அவரது கணவா் ஆகியோரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல்லை அடுத்த மா.மூ.கோவிலூா் ஊராட்சிக்குள... மேலும் பார்க்க