செய்திகள் :

டெல்லி: இரட்டை கொலையில் முடிந்த திருமணம் மீறிய உறவு; கர்ப்பிணி காதலியைக் குத்திக்கொன்ற இளைஞர்

post image

டெல்லி ராம் நகரில் வசித்து வருபவர் ஆகாஷ். இவரது மனைவி சாலினி ஆட்டோ டிரைவர். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. சாலினிக்கு சைலேந்திரா என்பவருடன் திருமணம் தாண்டிய உறவு இருந்து வந்தது.

தற்போது சாலினி கர்ப்பமாக இருந்தார். அந்தக் குழந்தைக்கு சைலேந்திராதான் தந்தை என்று கூறப்படுகிறது. இதனால் ஆகாஷை விட்டுவிட்டு தன்னுடன் வந்து வாழும்படி சைலேந்திரா கேட்டுக்கொண்டார். ஆனால் குழந்தை மற்றும் கணவனைக் காரணம் காட்டி சைலேந்திராவுடன் வர மறுத்து வந்தார் சாலினி.

இதனால் ஆகாஷ் மீது சைலேந்திரா கோபத்தில் இருந்தார். ஆகாஷ் தனது மனைவி சாலினியை அழைத்துக்கொண்டு தனது தாயாரைப் பார்க்க சென்று கொண்டிருந்தார்.

அந்நேரம் அவரின் வருகைக்காகக் காத்திருந்த சைலேந்திரா தன்னிடம் இருந்த கத்தியால் ஆகாஷை வழிமறித்து தாக்கினார். ஆனால் அவரது தாக்குதலில் இருந்து ஆகாஷ் தப்பினார். அந்நேரம் ஆட்டோவில் சாலினி இருப்பதை சைலேந்திரா பார்த்தார்.

சாலினி, சைலேஷ், ஆகாஷ்
சாலினி, சைலேஷ், ஆகாஷ்

உடனே சாலினியை சைலேந்திரா தன்னிடம் இருந்த கத்தியால் சரமாரியாகக் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே கர்ப்பிணியான சாலினி கீழே விழுந்தார். சைலேந்திராவிடமிருந்து தனது மனைவியைக் காப்பாற்ற ஆகாஷ் முயன்றார்.

உடனே ஆகாஷையும் சைலேந்திரா கத்தியால் குத்தினார். இதனால் சைலேந்திராவிடமிருந்து கத்தியைப் பிடுங்கிய ஆகாஷ் அந்தக் கத்தியால் சைலேந்திராவை சரமாரியாகக் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே சைலேந்திரா மற்றும் சாலினி ஆகியோர் உயிரிழந்தனர்.

சாலினியின் சகோதரர் ரோஹித்தும் போலீஸாரும் மூவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆகாஷ் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலை, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீஸார் சாலினியின் தாயாரிடம் வாக்குமூலம் வாங்கி இருக்கின்றனர்.

சாலினியின் தாயார் ஷீலா அளித்துள்ள வாக்குமூலத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆகாஷ் மற்றும் சாலினி இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் சாலினி, சைலேந்திராவுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழத் தொடங்கினர்.

அதன் பிறகு ஆகாஷுடன் சாலினிக்குச் சமாதானம் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தைகளுடன் ஆகாஷ் சாலினியுடன் சேர்ந்து வாழத் தொடங்கினர்'' என்றார்.

மும்பை: 1200 அடி பள்ளத்தாக்கில் பிணமாகக் கிடந்த பெங்களூரு பேராசிரியர்; தீவிர விசாரணையில் போலீஸ்

பெங்களூருவில் பேராசிரியராக இருந்தவர் சண்முக பால சுப்ரமணியம் (58). இவர் சிறந்த பேச்சாளர் ஆவார். நாடு முழுவதும் தனியார் நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்காக நடத்தும் கருத்தரங்குகளில் பேச்சாளராக இவரை அழ... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசம்: "அண்ணனின் சிகிச்சைக்கு பணம் தேவை" - சொந்த வீட்டில் ரூ.30 லட்சம் திருடிய பெண்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மகாவிர்ஜி நகரில் வசித்து வருபவர் மியூஷ் மித்தல். துணி வியாபாரியான மித்தல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பூஜா (32) என்ற பெண்ணை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.கடந்... மேலும் பார்க்க

``நான் யாரு தெரியுமா? என் அப்பா கலெக்டர் பி.ஏ!'' - மது போதையில் தகராறு; சம்பவம் செய்த கடலூர் எஸ்.பி

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் இருந்து மதுபான கடத்தலை தடுப்பதற்காக, நேற்று கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போ... மேலும் பார்க்க

Louvre Museum: `விலைமதிப்பற்ற' நெப்போலியன் நகைகள் திருட்டு; உச்ச பாதுகாப்பை தாண்டி எப்படி நடந்தது?

உலகிலேயே மதிப்புமிக்க வரலாற்றுக் கலைப்பொருட்கள் இருக்கும் அருங்காட்சியகம் பாரிஸில் உள்ள லூவர். மோனா லிசா போன்ற அதீத முக்கியத்துவம் கொண்ட பொருட்கள் இங்கு உயர் தொழில்நுட்ப கண்காணிப்பில் உள்ளன. இங்கிருந்... மேலும் பார்க்க

`ஆன்லைனில் மது ஆர்டர்' - ரூ. 7 லட்சத்தை இழந்த சினிமா நிறுவனம்; சைபர் கிரைம் மோசடி

இப்போதெல்லாம் எந்தப் பொருளை வாங்குவதாக இருந்தாலும் அதை ஆன்லைனில் வாங்குவது அதிகரித்து இருக்கிறது. ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்யும் போது, சைபர் கிரிமினல்களால் பலர் தங்களது பணத்தை இழந்து விடுகின்றனர்... மேலும் பார்க்க

சீனா டு தூத்துக்குடி; துறைமுகத்தில் சிக்கிய ரூ.5 கோடி மதிப்பிலான சீன `பைப்' பட்டாசுகள் -விவரம் என்ன?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகள் கடத்தி விற்கப்படுகிறதா என, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையி... மேலும் பார்க்க