செய்திகள் :

டெல்லிக்கு மீண்டும் பெண் முதல்வர்: முதல்முறையாக வெற்றி பெற்ற ரேகா குப்தா நாளை முதல்வராக பதவியேற்பு!

post image

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி தோல்வியை சந்தித்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்து சில நாட்கள் ஆன நிலையில் புதிய முதல்வர் பதவியேற்பது தாமதமாகிக்கொண்டிருந்தது. பிரதமரின் வெளிநாட்டுப்பயணத்தை தொடர்ந்து இத்தாமதம் ஏற்பட்டது. நேற்று பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் டெல்லி பா.ஜ.க சட்டமன்ற தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் கட்சியின் மேலிட பார்வையாளர்களாக ரவிசங்கர் பிரசாத், ஓம் பிரகாஷ் தன்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் யாரும் எதிர்பாராத திருப்பமாக டெல்லி சாலிமர் பாக் தொகுதியில் இருந்து முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தா புதிய சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரேகா குப்தா டெல்லியில் மூன்று முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இதனை டெல்லி பா.ஜ.க தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

ரேகா குப்தா தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் சென்று டெல்லி ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவர் நாளை காலையில் 11 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் விழாவில் 6 அமைச்சர்களுடன் புதிய முதல்வராக பதவியேற்கிறார். டெல்லிக்கு புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரேகா குப்தாவிற்கு முன்னாள் முதல்வர் அதிஷி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு 1998ம் ஆண்டு, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் 52 நாட்கள் முதல்வராக இருந்தார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீட்ஷித் தொடர்ந்து 15 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். பின்னர் அர்விந்த் கெஜ்ரிவாலும், அதனை தொடர்ந்து கடைசியாக அதிஷியும் முதல்வராக இருந்தனர்.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க 48 தொகுதியிலும், ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. நடைபெறும் பதவியேற்பு விழாவில் 50 பாலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தவிர பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், 20 மாநில முதல்வர்கள், துணை முதல்வர்களும் இப்பதவியேற்பு விழாவில் பங்கேற்க இருக்கின்றனர். பதவியேற்பு விழாவில் 30 ஆயிரம் பேர் பங்கேற்க இருக்கின்றனர். 26 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ.க டெல்லியில் நாளை ஆட்சி அமைக்கிறது.

USAID அமைப்போடு நீண்ட கால தொடர்பு; பொய் சொல்கிறதா பாஜக? - Fact Checkers சொல்வதென்ன?

அமெரிக்காவின் USAID அமைப்பு 21 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவின் தேர்தல் விழிப்புணர்வு பணிகளுக்கு ஒதுக்கியதன் மூலம், இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் தலையிடும் விதமாக செயல்பட்டதாக ட்ரம்ப் அ... மேலும் பார்க்க

NEP: `குறுகிய கண்ணோட்டம் வேண்டாம்; அரசியல் காரணங்களுக்காக..! - ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில், தமிழ்நாடு அரசு இதை ஏற்றுக்கொள்ளாவிடில் தமிழ்நாட்டுக்கு கல்விக்கான நிதி ஒதுக்க சட்டத்தில் இடமில்லை என்று, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான கடந்த வாரம் கூறியது ம... மேலும் பார்க்க

`நான் CBSE பள்ளி நடத்தவில்லை; ஊடக விமர்சனத்திற்காக இப்படி...' - அண்ணாமலைக்கு திருமாவளவன் பதில்!

'மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்' என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது தமிழ்நாட்டில் பெரும் விவாவதப் பொருளாகியிருக்கிறது.இதையடுத்து இந்தித் திணிப்புக்கு எதிராகவும்... மேலும் பார்க்க

NEP: ”தேசிய கல்விக் கொள்கை அமலானால், 75 சதவீத மாணவர்கள் கல்வியை விட்டுவிடுவார்கள்”- முத்தரசன்

தஞ்சாவூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 27வது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "நாடு முழுவதும் ... மேலும் பார்க்க

கும்பமேளா: "அந்த தண்ணீரை நீங்கள் குடியுங்கள் பார்க்கலாம்.." - ஆதித்யநாத்திற்கு பிரசாந்த் பூஷன் சவால்

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்வில் புனித நீராடுவதில் மக்கள் ஆர்வமாக உள்ள நிலையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தாக்கல் செய்த அறிக்கை அதிர்ச்சித் த... மேலும் பார்க்க

Delhi: மோடி முன்னிலையில் டெல்லி முதல்வராகப் பதவியேற்ற ரேகா குப்தா; ரேஸில் இருந்தவர்களுக்கும் பதவி!

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த பா.ஜ.க, முதல்வர் யார் என்பதை இறுதி செய்யாமல் இழுத்தடித்து வந்தது. நேற்று மாலைதான் புதிய முதல்வர் யார் என்பதை கட்சித் தலைமை அறிவ... மேலும் பார்க்க