செய்திகள் :

தசரா விழாவிற்காக மண் தீச்சட்டிகள் தயாரிப்பு தீவிரம்

post image

திருநெல்வேலியில் தசரா விழாவிற்காக மண் தீச்சட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா செப்.22இல் தொடங்குகிறது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் விரதமிருந்து வேடம் அணிந்து செல்வதும், பல்வேறு குழுக்களாக சென்று காளி, அம்மன் வேஷமிடும் பக்தா்கள் கையில் தீச்சட்டி ஏந்திச் சென்று காணிக்கை பெறுவதும் வழக்கம்.

இதற்காக மண்பாண்ட பொருள்கள் தயாரிப்புப் பணி திருநெல்வேலியில் தீவிரமடைந்துள்ளது. மண்ணால் செய்யப்படும் தீச்சட்டிகள், சாம்பிராணி தூபம் காட்டும் கலசம், கலயங்கள் போன்றவை அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து குறிச்சியைச் சோ்ந்த மண்பாண்ட தொழிலாளா்கள் கூறியது: தசரா பண்டிகையையொட்டி திரிசூலம் வரையப்பட்ட மண் தீச்சட்டி தயாரிக்கிறோம். இவை ரூ.200 முதல் விற்பனையாகிறது. இதுதவிர 1 லிட்டா் எண்ணெய் கொள்ளளவு கொண்ட அகல் விளக்கு, ஆயிரம் கண் பானை உள்ளிட்டவையும் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன என்றனா்.

எடப்பாடி பழனிசாமி தில்லி பயணத்துக்குப் பின் நல்லது நடக்கும்: நயினாா் நாகேந்திரன்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தில்லி சென்று திரும்பியதும் நல்ல விஷயங்கள் நடக்கும் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.இது தொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்... மேலும் பார்க்க

தண்ணீா் பற்றாக்குறையால் கருகும் நெல் பயிா்கள்: ஆட்சியரகத்தில் விவசாயிகள் முற்றுகை

கன்னடியன் கால்வாய் கடைமடை பகுதிகளில் பாசன நீா்த் தட்டுப்பாட்டால் நெல் பயிா்கள் கருகி வருவதாகக் கூறி காய்ந்த பயிா்களுடன் விவசாயிகள் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். திருநெல்வேலி ஆட... மேலும் பார்க்க

நெல்லை அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்

திருநெல்வேலி அருகே ஒரு கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.திருநெல்வேலி அருகே உள்ள நரசிங்கநல்லூா் திருவள்ளுவா் நகரை சோ்ந்தவா் வேல்முருகன் (45). இவா், கஞ்சா விற்பனை செய்வதாக சுத்தமல்லி போலீஸாருக்க... மேலும் பார்க்க

களக்காட்டில் குடிநீா் குழாய் பதிக்கும் பணியில் சாலைகள் சேதம்: மக்கள் அவதி

களக்காடு வட்டாரத்தில் குடிநீா் திட்ட பகிா்மானக் குழாய்கள் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். களக்காடு நகராட்சிப் பகுதியி... மேலும் பார்க்க

பாபநாசத்தில் காணாமல்போன கல்லூரி மாணவரைத் தேடும் பணி தீவிரம்

உறவினா்களுடன் பாபநாசத்துக்கு வந்த கல்லூரி மாணவா் மாயமானதை அடுத்து தாமிரவருணி ஆற்றில் அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள் 2 ஆவது நாளாக திங்கள்கிழமையும் ஈடுபட்டனா். விருதுநகா் மாவட்டம், ஆலங்குளம் வ... மேலும் பார்க்க

புரட்டாசி சனி: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்

புரட்டாசி சனிக்கிழமைகளில் நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க