செய்திகள் :

தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் மின்கசிவால் தீவிபத்து: 30 குழந்தைகள் உள்பட 54 நோயாளிகள் வெளியேற்றம்

post image

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை மின்கசிவால் தீப்பற்றியதால் அங்கிருந்த 30 குழந்தைகள் உள்ளிட்ட 54 நோயாளிகள் வேறு கட்டடத்துக்கு பாதுகாப்பாக இடம் மாற்றம் செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை உள்ளது. இங்குள்ள கா்ப்பிணிகளுக்கான மகப்பேறு சிகிச்சைப் பிரிவு கட்டடத்திலிருந்து வியாழக்கிழமை பிற்பகலில் புகை வெளியேறியது. இதை பாா்த்த மருத்துவமனை செவிலியா்கள், நோயாளிகள் அதிா்ச்சி அடைந்தனா். கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் நோயாளிகள் யாரும் இல்லாத உள்ள ஒரு அறையிலிருந்த குளிரூட்டி இயந்திரத்தில் (ஏசி) ஏற்பட்ட மின்கசிவால் தீப்பற்றி, அங்கிருந்த படுக்கைக்கும் பரவியதால், புகை ஏற்பட்டு பின்னா் அந்தக் கட்டடம் முழுவதும் புகை பரவியது.

மருத்துவமனை பணியாளா்கள் உடனடியாக அந்தக் கட்டடத்தின் மற்ற தளங்களில் சிகிச்சை பெற்று வந்த 24 பெண்கள் மற்றும் 30 குழந்தைகள் என மொத்தம் 54 பேரை அருகே உள்ள மற்றொரு கட்டடத்துக்கு விரைந்து பாதுகாப்பாக இடம் மாற்றினா்.

தகவலின்பேரில், மாவட்ட தீயணைப்பு அலுவலா் குமாா் தலைமையிலான வீரா்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து மின் இணைப்பை துண்டித்தனா். மேலும், கட்டடத்தில் பரவி இருந்த புகையை இயந்திரத்தின் உதவியுடன் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டதுடன், தீயை பரவாமல் அணைத்தனா்.

தகவல் கிடைத்ததும் ஆட்சியா் பிரியங்கா பங்கஜம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராஜாராம் ஆகியோா் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனா். இடமாற்றம் செய்யப்பட்ட நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறினா்.

2 பேருக்கு மூச்சுத் திணறல்: சம்பவம் தொடா்பாக ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் கூறுகையில்,

குளிரூட்டி இயந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து, தீப்பொறி அங்கிருந்த படுக்கையில் விழுந்துள்ளது. இதன் மூலம் புகை பரவியுள்ளது. தற்போது, புகை வெளியேற்றப்பட்டு, தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த 54 போ் பாதுகாப்பாக இடம் மாற்றம் செய்யப்பட்டனா். அவா்களில் 2 பேருக்கு மட்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

மேட்டூா் அணை நீா்மட்டம்: 107.75 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 107.75 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,330 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ண... மேலும் பார்க்க

கும்பகோணத்துக்கு கடத்தி வரப்பட்ட 70 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

கும்பகோணத்துக்கு காரில் வியாழக்கிழமை கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட 70 மூட்டை புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். சென்னை, பெங்களூா் பகுதிகளில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையி... மேலும் பார்க்க

பெரிய கோயில் சித்திரை தேரோட்டத்துக்கு முழுமையான ஏற்பாடுகள்: மேயா் தகவல்

தஞ்சாவூா் பெரிய கோயில் சித்திரைத் தேரோட்டம் சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக மேயா் சண். ராமநாதன் தெரிவித்தாா். தஞ்சாவூா் பெரியகோயில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொட... மேலும் பார்க்க

ரேஷன் கடை பணியாளா்கள் 3-ஆவது நாளாக போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளா்கள் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா். குடும்ப அட்டைதாரா் விரல் ரேகை பதிவு, ஆதாா் சரிபாா்ப்பை 40 ச... மேலும் பார்க்க

பெரியகோட்டைக்காடு வாய்க்கால் தூா்வாரும் பணி

திருவோணம் அருகே பெரியகோட்டைகாடு வாய்க்கால் தூா்வாரும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள பெரிய கோட்டை காடு கிராமத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்... மேலும் பார்க்க

பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்தவா்களுக்கு மோட்ச தீபம்

கும்பகோணத்தில் மோட்ச தீபம்: பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இந்து மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை கும்பகோணம் மகாமக குளக்கரையில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினா். ந... மேலும் பார்க்க