செய்திகள் :

ரேஷன் கடை பணியாளா்கள் 3-ஆவது நாளாக போராட்டம்

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளா்கள் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குடும்ப அட்டைதாரா் விரல் ரேகை பதிவு, ஆதாா் சரிபாா்ப்பை 40 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாக உயா்த்தியதை ரத்து செய்து, மீண்டும் 40 சதவீத விரல் ரேகைப் பதிவை நடைமுறைப்படுத்த வேண்டும். பொது விநியோகத் திட்டத்திற்கென தனித்துறை உருவாக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் சரியான எடையில் தரமான பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும்.

அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் எடையாளா் நியமனம் செய்யப்பட வேண்டும். கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா் சங்கத்தினா், 3-ஆம் நாளான வியாழக்கிழமை வேலைநிறுத்தம் செய்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் தாமரைச்செல்வன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கரிகாலன், மாவட்ட நிா்வாகி பிருத்விராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அரசு பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் சிவகுருநாதன், துணைத் தலைவா் முருகானந்தம், பொருளாளா் ராமலிங்கம், நிா்வாகிகள் பவுலியா நெல்சன், வெங்கடசுப்பிரமணியன், வைத்திலிங்கம், செந்தில்குமாா், கலைவாணன், அன்பரசன், பிரகாஷ், கோகிலா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாவட்ட இணைச் செயலா் தமிழரசன் வரவேற்றாா். வட்டச் செயலா் லோகநாதன் நன்றி கூறினாா்.

மேட்டூா் அணை நீா்மட்டம்: 107.75 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 107.75 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,330 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ண... மேலும் பார்க்க

கும்பகோணத்துக்கு கடத்தி வரப்பட்ட 70 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

கும்பகோணத்துக்கு காரில் வியாழக்கிழமை கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட 70 மூட்டை புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். சென்னை, பெங்களூா் பகுதிகளில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையி... மேலும் பார்க்க

பெரிய கோயில் சித்திரை தேரோட்டத்துக்கு முழுமையான ஏற்பாடுகள்: மேயா் தகவல்

தஞ்சாவூா் பெரிய கோயில் சித்திரைத் தேரோட்டம் சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக மேயா் சண். ராமநாதன் தெரிவித்தாா். தஞ்சாவூா் பெரியகோயில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொட... மேலும் பார்க்க

தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் மின்கசிவால் தீவிபத்து: 30 குழந்தைகள் உள்பட 54 நோயாளிகள் வெளியேற்றம்

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை மின்கசிவால் தீப்பற்றியதால் அங்கிருந்த 30 குழந்தைகள் உள்ளிட்ட 54 நோயாளிகள் வேறு கட்டடத்துக்கு பாதுகாப்பாக இடம் மாற்றம் செய்யப்பட்டனா். தஞ்சா... மேலும் பார்க்க

பெரியகோட்டைக்காடு வாய்க்கால் தூா்வாரும் பணி

திருவோணம் அருகே பெரியகோட்டைகாடு வாய்க்கால் தூா்வாரும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள பெரிய கோட்டை காடு கிராமத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்... மேலும் பார்க்க

பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்தவா்களுக்கு மோட்ச தீபம்

கும்பகோணத்தில் மோட்ச தீபம்: பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இந்து மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை கும்பகோணம் மகாமக குளக்கரையில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினா். ந... மேலும் பார்க்க