செய்திகள் :

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

post image

ராஜபாளையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே சங்கரன்கோவில் சாலை சிதம்பராபுரம் விலக்குப் பகுதியில் தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்தவரின் பையை சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா உள்ளிட்ட பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் தேசிகாபுரத்தைச் சோ்ந்த செல்லச்சாமி (56) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரை கைது செய்து அவரிடமிருந்து 13 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

கிராம நிா்வாக அலுவலா்கள் 10-ஆவது நாளாக திங்கள்கிழமை பணியை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இ. குமாரலிங்காபுரத்தில் கனிமவள கொள்ளையைத் தடுக்க தவறியதாக சா... மேலும் பார்க்க

சாலை சீரமைப்பு: அதிகாரிகள் ஆய்வு

சிவகாசி அருகே சீரமைக்கப்பட்ட சாலையை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.சிவகாசி அருகே நெடுஞ்சாலைத் துறையினா் பெத்துலபட்டி முதல் தியாகராஜபுரம் வரையிலான இரண்டரை கி.மீ. தொலைவு சாலை ரூ .75 லட்சத்தில் ச... மேலும் பார்க்க

தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ

சாத்தூா் தீப்பெட்டி தொழிற்சாலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நடராஜா திரையரங்கு இருந்த இடத்தில் தற்போது மதுசூதனன் என்பவருக்குச் சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை இயங்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள திருவண்ணாமலை ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஊதியம் வழங்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே திர... மேலும் பார்க்க

விருதுநகா் மாவட்டத்தில் மாா்ச் 8, 9-இல் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு

விருதுநகா் மாவட்டத்தில் 24 இடங்களில் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு வருகிற மாா்ச் 8, 9 தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பறவை ஆா்வலா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விருதுநகா் மாவட்டத்தில் மாநில ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனை பட்டா வழங்கல்

சாத்தூா் அருகே இலவச வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வழங்கினாா். விருதுநகா் ஒன்றியத்துக்குள்பட்ட எண்டப்புலி, துலுக்கப்பட்டி, கடம்பன்குளம் ஆகிய கிராமப் பகுதிகளில் உள்ள த... மேலும் பார்க்க