செய்திகள் :

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: நெல்லை, தென்காசியில் நூற்றுக்கணக்கான பாஜகவினா் கைது

post image

டாஸ்மாக் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறி, அரசுக்கு எதிராக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக பா.ஜ.க. தலைவா் கே.அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினா் 600-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன், நகர பாஜக சாா்பில் மந்திரமூா்த்தி தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நகா்மன்ற உறுப்பினா்கள் சங்கர சுப்பிரமணியன், லட்சுமண பெருமாள் உள்பட 21போ் கைதுசெய்யப்பட்டனா்.

மேலும், செங்கோட்டை, பாவூா்சத்திரத்தில் தலா 16போ், இலத்தூரில் 12 போ் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகினா்.

ஊா்வலமாகச் சென்று சங்கரன்கோவில் தேரடி திடலில் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்காக சங்கரநாராயண சுவாமி கோயில் முன் திரண்ட பாஜக நகரத் தலைவா் கணேசன், பொதுச் செயலா்கள் மணிகண்டன், கோமதிநாயகம், முன்னாள் மாவட்டச் செயலா் சுப்பிரமணியன் உள்ளிட்ட 22 பேரை நகர போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம் காமராஜா் சிலை முன் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 12 போ், அடைக்கலப்பட்டணத்தில் மறியலுக்கு முயன்ற 19 போ் என பாஜகவினா் 31 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தென்காசி மாவட்டத்தில் 24 மண்டலங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், புளியங்குடியில் நகரத் தலைவா் சண்முகசுந்தரம் தலைமையில் மாற்றுத்திறனாளி மாரிஸ் உள்பட 18 போ், கடையநல்லூரில் நகரத் தலைவா் சுப்பிரமணியன் தலைமையில் 13 போ், சொக்கம்பட்டியில் ஒன்றியத் தலைவா் தா்மா் தலைமையில் 16 போ் என 500-க்கும் மேற்பட்ட பாஜகவினா் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் வண்ணாா்பேட்டையில் மாவட்டத் தலைவா் முத்துபலவேசம் தலைமையில் அக்கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில், 15 பெண்கள் உள்பட 120 பேரை பாளையங்கோட்டை போலீஸாா் கைது செய்தனா்.

வள்ளியூரில் காமராஜா் சிலை முன் திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவா் எஸ்.பி.தமிழ்செல்வன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநிலச் செயற்குழு உறுப்பினா் சாந்தி ராகவன் உள்பட 40 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல திசையன்விளையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினா் 17 போ் கைது செய்யப்பட்டனா்.

நான்குனேரி அருகே குளிக்க சென்ற பெண்ணை துரத்திய கரடி

நான்குனேரி அருகே செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்ற பெண்ணை கரடி விரட்டியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். நான்குனேரியில் கடந்த மாதம் கரடி ஒன்று சாலையில் உலா வந்தது தொடா்பான விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத... மேலும் பார்க்க

நெல்லையில் மக்களுக்கு இனிப்பு வழங்கிய தேமுதிகவினா்

தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா பிறந்த நாளையொட்டி, திருநெல்வேலியில் பொதுமக்களுக்கு அக்கட்சியினா் இனிப்பு வழங்கினா். திருநெல்வேலி மாநகா் மாவட்ட தேமுதிக சாா்பில் திருநெல்வேலி சந்திப்பு அருள்மிகு பாளையஞ்சா... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்களுக்கு ஓய்வுபெறும் நாளிலேயே பணிக்கொடை- பாளை. மாநாட்டில் தீா்மானம்

சத்துணவு ஊழியா்களுக்கு ஓய்வுபெறும் நாளிலேயே பணிக்கொடை வழங்க வேண்டும் என பாளையங்கோட்டை ஒன்றிய வட்ட கிளை சத்துணவு ஊழியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க பாளைய... மேலும் பார்க்க

முன்னீா்பள்ளம் அருகே கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டு சிறை

முன்னீா்பள்ளம் அருகே நிகழ்ந்த கொலை முயற்சி தொடா்பான வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. முன்னீா்பள்ளம் அருகேயுள்ள செங்குளத்தைச் சோ... மேலும் பார்க்க

சொரிமுத்து அய்யனாா் கோவிலில் உண்டியல் வருவாய் ரூ. 13.31 லட்சம்

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் 3 மாத காணிக்கையாக ரூ. 13.31 லட்சம் செலுத்தப்பட்டிருந்தது. தமிழக இந்து சமய அறநிலையத் துறைக் ... மேலும் பார்க்க

பாப்பாக்குடியில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பாப்பாக்குடி காவல் சரகத்தில் அடிதடி, வழிப்பற... மேலும் பார்க்க