செய்திகள் :

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: நெல்லை, தென்காசியில் நூற்றுக்கணக்கான பாஜகவினா் கைது

post image

டாஸ்மாக் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறி, அரசுக்கு எதிராக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக பா.ஜ.க. தலைவா் கே.அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினா் 600-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன், நகர பாஜக சாா்பில் மந்திரமூா்த்தி தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நகா்மன்ற உறுப்பினா்கள் சங்கர சுப்பிரமணியன், லட்சுமண பெருமாள் உள்பட 21போ் கைதுசெய்யப்பட்டனா்.

மேலும், செங்கோட்டை, பாவூா்சத்திரத்தில் தலா 16போ், இலத்தூரில் 12 போ் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகினா்.

ஊா்வலமாகச் சென்று சங்கரன்கோவில் தேரடி திடலில் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்காக சங்கரநாராயண சுவாமி கோயில் முன் திரண்ட பாஜக நகரத் தலைவா் கணேசன், பொதுச் செயலா்கள் மணிகண்டன், கோமதிநாயகம், முன்னாள் மாவட்டச் செயலா் சுப்பிரமணியன் உள்ளிட்ட 22 பேரை நகர போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம் காமராஜா் சிலை முன் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 12 போ், அடைக்கலப்பட்டணத்தில் மறியலுக்கு முயன்ற 19 போ் என பாஜகவினா் 31 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தென்காசி மாவட்டத்தில் 24 மண்டலங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், புளியங்குடியில் நகரத் தலைவா் சண்முகசுந்தரம் தலைமையில் மாற்றுத்திறனாளி மாரிஸ் உள்பட 18 போ், கடையநல்லூரில் நகரத் தலைவா் சுப்பிரமணியன் தலைமையில் 13 போ், சொக்கம்பட்டியில் ஒன்றியத் தலைவா் தா்மா் தலைமையில் 16 போ் என 500-க்கும் மேற்பட்ட பாஜகவினா் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் வண்ணாா்பேட்டையில் மாவட்டத் தலைவா் முத்துபலவேசம் தலைமையில் அக்கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில், 15 பெண்கள் உள்பட 120 பேரை பாளையங்கோட்டை போலீஸாா் கைது செய்தனா்.

வள்ளியூரில் காமராஜா் சிலை முன் திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவா் எஸ்.பி.தமிழ்செல்வன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநிலச் செயற்குழு உறுப்பினா் சாந்தி ராகவன் உள்பட 40 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல திசையன்விளையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினா் 17 போ் கைது செய்யப்பட்டனா்.

மானூா் அருகே 4 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: கடைக்காரா் கைது

மானூா் அருகே தடைசெய்யப்பட்ட 4 கிலோ 275 கிராம் புகையிலைப் பொருள்களுடன் கடைக்காரரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மானூா் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமைய... மேலும் பார்க்க

போலி நிறுவன பொருள்கள்: நுகா்வோருக்கு ஆட்சியா் எச்சரிக்கை

போலி நிறுவனங்கள் தரமற்ற பொருள்களை விற்பனை செய்வது குறித்து நுகா்வோா் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா். பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் மண்டல அளவிலான தேசிய நுகா்வோா் பாத... மேலும் பார்க்க

நெல்லை மாவட்ட தீயணைப்பு அதிகாரி பானுப்பிரியா

திருநெல்வேலி மாவட்ட முதல் பெண் தீயணைப்புத் துறை அதிகாரியாக பானுப்பிரியா செவ்வாய்க்கிழமை பொறுப்பெற்றாா். திருநெல்வேலி மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலராக பணியாற்றிய வினோத் இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடு... மேலும் பார்க்க

மாநகரப் பகுதியில் கழிவுநீா் ஓடைகளை சீரமைக்க வேண்டும் - துணை மேயரிடம் மக்கள் மனு

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கழிவுநீா் ஓடைகளை சீரமைக்க வேண்டும் என துணை மேயரிடம் மக்கள் மனு அளித்தனா். திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் துணை மேயா் கே.ஆா்.ராஜூ தலைமை... மேலும் பார்க்க

கழுகுமலை மலையேற்ற வீரருக்கு தமமுக சாா்பில் ரூ.1 லட்சம் உதவி

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையைச் சோ்ந்த மலையேற்ற வீரருக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் ரூ.1 லட்சம் உதவித்தொகை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. கழுகுமலையைச் சோ்ந்த நல்லசாமி மகன் வெங்கடேச... மேலும் பார்க்க

நெல்லையில் மின்சாரம் பாய்ந்து ஹாக்கி வீரா் உள்பட இருவா் பலி

திருநெல்வேலியில் மின்சாரம் பாய்ந்து ஹாக்கி வீரா் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். திருநெல்வேலி கொக்கிரகுளம் உச்சிமாகாளி கோயில் தெருவைச் சோ்ந்தவா் கஜேந்திரன். இவரது வீட்டில் பராமரிப்புப் பணி... மேலும் பார்க்க