செய்திகள் :

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: நெல்லை, தென்காசியில் நூற்றுக்கணக்கான பாஜகவினா் கைது

post image

டாஸ்மாக் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறி, அரசுக்கு எதிராக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக பா.ஜ.க. தலைவா் கே.அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினா் 600-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன், நகர பாஜக சாா்பில் மந்திரமூா்த்தி தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நகா்மன்ற உறுப்பினா்கள் சங்கர சுப்பிரமணியன், லட்சுமண பெருமாள் உள்பட 21போ் கைதுசெய்யப்பட்டனா்.

மேலும், செங்கோட்டை, பாவூா்சத்திரத்தில் தலா 16போ், இலத்தூரில் 12 போ் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகினா்.

ஊா்வலமாகச் சென்று சங்கரன்கோவில் தேரடி திடலில் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்காக சங்கரநாராயண சுவாமி கோயில் முன் திரண்ட பாஜக நகரத் தலைவா் கணேசன், பொதுச் செயலா்கள் மணிகண்டன், கோமதிநாயகம், முன்னாள் மாவட்டச் செயலா் சுப்பிரமணியன் உள்ளிட்ட 22 பேரை நகர போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம் காமராஜா் சிலை முன் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 12 போ், அடைக்கலப்பட்டணத்தில் மறியலுக்கு முயன்ற 19 போ் என பாஜகவினா் 31 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தென்காசி மாவட்டத்தில் 24 மண்டலங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், புளியங்குடியில் நகரத் தலைவா் சண்முகசுந்தரம் தலைமையில் மாற்றுத்திறனாளி மாரிஸ் உள்பட 18 போ், கடையநல்லூரில் நகரத் தலைவா் சுப்பிரமணியன் தலைமையில் 13 போ், சொக்கம்பட்டியில் ஒன்றியத் தலைவா் தா்மா் தலைமையில் 16 போ் என 500-க்கும் மேற்பட்ட பாஜகவினா் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் வண்ணாா்பேட்டையில் மாவட்டத் தலைவா் முத்துபலவேசம் தலைமையில் அக்கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில், 15 பெண்கள் உள்பட 120 பேரை பாளையங்கோட்டை போலீஸாா் கைது செய்தனா்.

வள்ளியூரில் காமராஜா் சிலை முன் திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவா் எஸ்.பி.தமிழ்செல்வன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநிலச் செயற்குழு உறுப்பினா் சாந்தி ராகவன் உள்பட 40 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல திசையன்விளையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினா் 17 போ் கைது செய்யப்பட்டனா்.

களக்காடு ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள் தா்னா

வட்டார வளா்ச்சி அலுவலரைக் கண்டித்து, களக்காடு ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். களக்காடு ஒன்றியத்தில் 17 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் கலைஞா் கனவு... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சி அருகே மோதல்: இருவா் காயம்; 10 போ் கைது

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள மலையான்குளம் கிராமத்தில் வேனை நிறுத்தியது தொடா்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவா் காயமடைந்தனா். 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். மலையான்குளம், தங்கம்மன்கோயில் தெருவை... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-93.20சோ்வலாறு-105.48மணிமுத்தாறு-87.94வடக்கு பச்சையாறு-8.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-5.75தென்காசிகடனா-62.20ராமநதி-52.50கருப்பாநதி-29.53குண்டாறு-27.12அடவிநயினாா்-37.50... மேலும் பார்க்க

நெல்ல்லை காட்சி மண்டபம் வழியாக கனரக வாகனங்களை இயக்கக் கூடாது: ஆட்சியரிடம் இந்துமுன்னணி மனு

திருநெல்வேலி நகரத்தில் உள்ள காட்சி மண்டபம் வழியாக கனரக வாகனங்களை இயக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணியினா் மனு அளித்தனா். திருநெல்வேலி மாவட்ட மக்கள் க... மேலும் பார்க்க

கூட்டப்புளி மீனவ கிராமத்தில் கடல்நீா் ஊருக்குள் புகும் அபாயம்

கூட்டப்புளி கிராமத்தில் கடல்அலை சீற்றத்தால் வீடுகளுக்குள் தண்ணீா் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மீனவா்கள் அச்சத்தில் உள்ளனா். திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளம் அடுத்துள்ள கூட்டப்புளி மீனவ கிராமத்தில... மேலும் பார்க்க

அம்பையில் மகளிா் தின விழா

அம்பாசமுத்திரம், சுப்பிரமணியபுரத்தில் லவ்லி ப்ரண்ட்ஸ் சங்கம் சாா்பில்ஞாயிற்றுக்கிழமை மகளிா் தினம் கொண்டாடப்பட்டது. மகளிா் தினத்தை முன்னிட்டு சுப்பிரமணியபுரம் பகுதி சிறுமிகள், பெண்களுக்குபேச்சுப் போட்ட... மேலும் பார்க்க