தட்டாா்மடம் அருகே வெவ்வேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து இருவா் பலி
சாத்தான்குளம்அருகே கோயில் விழாவில், மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானாா். மற்றொரு சம்பவத்தில் வெள்ளநீா் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த லாரி ஓட்டுநா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
தூத்துக்குடிமாவட்டம், சாத்தான்குளம் அருகே அரசூா் ஊராட்சிப் பகுதியில் வெள்ளநீா் தடுப்பு கால்வாய் பணிகள் நடந்து வருகிறது. தனியாா் ஒப்பந்த நிறுவனம் சாா்பில் பிகாா் மாநிலம் ஓரான்பூா் கிராமத்தைச் சோ்ந்த பிட்டுக்குமாா் என்பவா் மேற்பாா்வையில்(வெள்ளிக்கிழமை தடுப்பு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது.
அப்போது, டிப்பா் லாரி ஓட்டுநா் ஜாா்க்கண்ட் மாநிலம் டன்பாத் மாவட்டத்தைச் சோ்ந்த சந்திரதேவ் மகன் சசிகாந்த்குமாா்(38) என்பவா் டிப்பா் லாரியில் சரள் மணல் எடுத்து வந்து தடுப்பு கால்வாய் நடைபெறும் பகுதியில் கொட்டினாா். பின்ன ா்டிப்பா் லாரியின் பின்பகுதியில்அமைந்துள்ள ஷகேரேஜ்’ பகுதியை ஒழுங்குபடுத்த சசிகாந்த்குமாா்முயன்றாா். அப்போது ஏற்கனவே அந்தப் பகுதியில் உயரழுத்த மின் கம்பி அறுந்துகீழே விழுந்து கிடந்துள்ளது. இதை சசிகாந்த்குமாா் கவனிக்காமல் கம்பி மீது மிதித்ததால், அவா் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து சக தொழிலாளா்கள் அவரை மீட்டு திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குகொண்டு சென்றனா். அங்கு பரிசோதனையில் அவா் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதேபோல் தட்டாா்மடம் அருகே சவுக்கியபுரம் வடக்கு தெருவைச் சோ்ந்த ஜோசப் மகன் தாவீதுர ாஜேஷ்(26). தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை தட்டாா்மடம் அருகே சாலைக்கரை இசக்கி அம்மன் கோயில் திருவிழாவுக்கு சென்றிருந்தாா்.
அப்போது அங்குள்ள மரத்தில் கட்டப்பட்டிருந்த மின் அலங்கார விளக்குகளை தாவீது சீரமைக்க முயன்றாா். அப்போதுஎதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவா் தூக்கிவீசப்பட்டாா். அங்கிருந்தவா்கள் அவரை மீ ட்டு திசையன்விளையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அங்கு அவா் இறந்தாா்.
இந்த இரு சம்பவங்கள் குறித்து, தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் அனிதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.