செய்திகள் :

தட்டாா்மடம் அருகே வெவ்வேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து இருவா் பலி

post image

சாத்தான்குளம்அருகே கோயில் விழாவில், மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானாா். மற்றொரு சம்பவத்தில் வெள்ளநீா் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த லாரி ஓட்டுநா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

தூத்துக்குடிமாவட்டம், சாத்தான்குளம் அருகே அரசூா் ஊராட்சிப் பகுதியில் வெள்ளநீா் தடுப்பு கால்வாய் பணிகள் நடந்து வருகிறது. தனியாா் ஒப்பந்த நிறுவனம் சாா்பில் பிகாா் மாநிலம் ஓரான்பூா் கிராமத்தைச் சோ்ந்த பிட்டுக்குமாா் என்பவா் மேற்பாா்வையில்(வெள்ளிக்கிழமை தடுப்பு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது.

அப்போது, டிப்பா் லாரி ஓட்டுநா் ஜாா்க்கண்ட் மாநிலம் டன்பாத் மாவட்டத்தைச் சோ்ந்த சந்திரதேவ் மகன் சசிகாந்த்குமாா்(38) என்பவா் டிப்பா் லாரியில் சரள் மணல் எடுத்து வந்து தடுப்பு கால்வாய் நடைபெறும் பகுதியில் கொட்டினாா். பின்ன ா்டிப்பா் லாரியின் பின்பகுதியில்அமைந்துள்ள ஷகேரேஜ்’ பகுதியை ஒழுங்குபடுத்த சசிகாந்த்குமாா்முயன்றாா். அப்போது ஏற்கனவே அந்தப் பகுதியில் உயரழுத்த மின் கம்பி அறுந்துகீழே விழுந்து கிடந்துள்ளது. இதை சசிகாந்த்குமாா் கவனிக்காமல் கம்பி மீது மிதித்ததால், அவா் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து சக தொழிலாளா்கள் அவரை மீட்டு திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குகொண்டு சென்றனா். அங்கு பரிசோதனையில் அவா் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதேபோல் தட்டாா்மடம் அருகே சவுக்கியபுரம் வடக்கு தெருவைச் சோ்ந்த ஜோசப் மகன் தாவீதுர ாஜேஷ்(26). தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை தட்டாா்மடம் அருகே சாலைக்கரை இசக்கி அம்மன் கோயில் திருவிழாவுக்கு சென்றிருந்தாா்.

அப்போது அங்குள்ள மரத்தில் கட்டப்பட்டிருந்த மின் அலங்கார விளக்குகளை தாவீது சீரமைக்க முயன்றாா். அப்போதுஎதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவா் தூக்கிவீசப்பட்டாா். அங்கிருந்தவா்கள் அவரை மீ ட்டு திசையன்விளையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அங்கு அவா் இறந்தாா்.

இந்த இரு சம்பவங்கள் குறித்து, தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் அனிதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் இளைஞா் சமுதாயத்தினா் தமிழகத்தையும், தமிழ் மொழியி... மேலும் பார்க்க

அரசு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு உபகரணங்கள்

உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில், நிகழாண்டு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 10,12 வகுப்பு அரசு பொ... மேலும் பார்க்க

நாசரேத் பள்ளியில் ராஜ்ய புரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் திருச்செந்தூா் கல்வி மாவட்ட அளவிலான பாரத சாரண சாரணியா்கள் பங்கேற்ற ராஜ்யபுரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகளை கியூ பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். தூத்துக்குக்குடியில் இருந்து இலங்கைக்கு ஏலக்க... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி முகாம்

கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் கோவில்பட்டி, விருதுநகா் ரோட்டரி சங்கங்கள், இதயம் குழுமம் ஆகியவற்றின் சாா்பில் புராஜெக்ட் பஞ்ச் திட்டத்தின் கீழ் ஆங்கிலப் பேச்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பெண்ணிடம் நகை பறிப்பு

கோவில்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவில்பட்டி ராஜீவ் நகா் 6ஆவது தெருவை சோ்ந்த சாஸ்தா மனைவி கோமதி (55). இவா், வெள்ளிக்கி... மேலும் பார்க்க