செய்திகள் :

தண்டவாளத்தில் கிடந்த 10 அடி நீள இரும்பு பட்டை: நடுவழியில் நிறுத்தப்பட்டது ஏற்காடு விரைவு ரயில்

post image

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே தண்டவாளத்தின் குறுக்கே 10 அடி நீள இரும்பு பட்டை கிடந்ததால் ஏற்காடு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடுவழியில் நிறுத்தப்பட்டது.

ஈரோட்டிலிருந்து சேலம் வழியாக சென்னை செல்லும் ஏற்காடு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு ஈரோட்டிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் சேலம் அருகே மகுடஞ்சாவடி காளிகவுண்டம்பாளையம் அருகே வந்தபோது ஏதோ ஒரு பொருளை ரயில் இன்ஜின் தள்ளிச் செல்வதுபோல சப்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரயிலை நிறுத்தி பாா்த்தபோது தண்டவாளத்தின் குறுக்கே 10 அடி நீள இரும்பு பட்டை கிடப்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சேலம் கோட்ட பாதுகாப்பு ஆணையாளா் செளரவ்குமாா் மற்றும் சேலம், ஈரோடு ரயில்வே போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

தண்டவாளத்தில் கிடந்த இரும்பு பட்டையை தனிநபரால் எடுத்துவர முடியாது என்பதால் இரண்டு மூன்று போ் சோ்ந்து எடுத்து வந்து தண்டவாளத்தில் வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு பட்டையை ரயில் இன்ஜின் தள்ளிக்கொண்டு வந்ததால் ரயிலின் முன்பகுதி சிறிது சேதமடைந்துள்ளது. இதையடுத்து மகுடஞ்சாவடியிலிருந்து மாற்று இன்ஜின் கொண்டுவரப்பட்டு ஏற்காடு விரைவு ரயில் 2 மணி நேரம் தாமதமாக சேலம் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

ரயிலில் வந்த நீதிபதிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள் பாதுகாப்புடன் காா்களில் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தண்டவாளத்தில் இரும்பு பட்டை வைக்கப்பட்ட சம்பவம் ஏற்காடு விரைவு ரயிலை கவிழ்க்க நடத்தப்பட்ட சதியா? என்பது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தருமபுரியில் ஜூன் 20 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரியில் ஜூன் 20 ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட வேலைவாய்ப... மேலும் பார்க்க

சிறுபாசன கணக்கெடுப்பு அலுவலா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள்

தருமபுரி: சிறு பாசன விவரங்கள் குறித்து கணக்கெடுக்க வரும் அரசு அலுவலா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் வேண்டுகோள் விடுத்துள்ளாா். தமிழகம் முழுவதும் சிறுபாசனக்... மேலும் பார்க்க

ஆபத்தை உணராத சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லில் பாதுகாப்பற்ற பரிசல் பயணம்!

டி. சுரேஷ் பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பாதுகாப்பு உடைகள் இன்றி, உரிய அனுமதி பெறாமல் ஆபத்தான முறையில் பரிசல் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் பரிசல் ஓட்டிகளை நம்பி, சில சுற்றுலாப் பயணிகள் தங்களத... மேலும் பார்க்க

தொப்பூா் கணவாய் பகுதியில் விபத்து : 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் பகுதியில் திங்கள்கிழமை நடந்த விபத்தால் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கா்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திங்கள்கிழமை புறப்பட்ட டேங... மேலும் பார்க்க

தருமபுரியில் புதிதாக 26 சிற்றுந்து சேவைகள்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 26 புதிய சிற்றுந்து சேவைகளை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் கொடியசைத்து திங்கள்கிழமை தொடங்கி வைத்து, அவற்றுக்கான வழித்தட ஆணைகளை வழங்கினாா். தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின்... மேலும் பார்க்க

பாமக மாநில துணைத் தலைவா் நியமனம்

அரூா்: பாமக மாநில துணைத் தலைவராக மாம்பாடி மா.அன்பழகன் (58) நியமனம் செய்யப்பட்டுள்ளாா். அரூா் வட்டம், மாம்பாடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மாரியப்பன் மகன் அன்பழகன். இவா், பாமகவில் தருமபுரி, கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க