செய்திகள் :

தனிப்பட்ட பயணத்திற்கு அரசு வாகனத்தை பயன்படுத்திய அமைச்சர் ராஜிநாமா!

post image

ஆஸ்திரேலியா நாட்டில் அரசினால் தனக்கு வழங்கப்பட்ட காரை தனது சொந்த பயணத்திற்கு பயன்படுத்திய விவகாரத்தில் அந்நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஜோ ஹைலன். கடந்த ஜன.25 அன்று இவர் தனக்கு அரசினால் வழங்கப்பட்ட காரையும் அதன் அரசு ஓட்டுநரையும் பயன்படுத்தி தனது நண்பர்கள் சிலருடன் சிட்னியிலிருந்து அங்குள்ள ஹண்டர் வேல்லி எனும் இடத்திற்கு தனிபட்ட ஒயின் விருந்திற்குச் சென்று திரும்பியுள்ளார்.

இதன் மூலம் 13 மணி நேரத்தில் சுமார் 446 கி.மீ. தூரத்திற்கு அவரது காரின் அரசு ஓட்டுநர் அந்த வாகனத்தை ஓட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: அமெரிக்க கைதிகளை சிறையில் அடைக்க முன்வரும் எல் சால்வடார்!

முன்னதாக, அந்நாட்டின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் முதல்வர் கிறிஸ் மின்ஸ் மக்களது வரிப்பணத்தில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அரசு காரை அவர்கள் தனிப்பட்ட பயணங்கள் மற்றும் வேலைகளுக்கு பயன்படுத்துவதை தடை செய்யும் சீர் திருத்தங்களை கொண்டு வந்தார்.

இந்நிலையில், தற்போது சொந்த பயணத்திற்காக அரசு வாகனத்தை உபயோகித்தது சர்ச்சையானதைத் தொடர்ந்து அதற்கு பொறுப்பேற்று தனது போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியை இன்று (பிப்.4) ஜோ ஹைலன் ராஜிநாமா செய்தார்.

இதுகுறித்து அவர் கூறுயிருப்பதாவது: மனிதர்கள் தவறு செய்வது இயல்பு, என் மீது மக்கள் வைத்திருந்த நன்மதிப்பை நான் இழந்துவிட்டேன் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என அவர் கூறினார்.

மேலும், தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் சம்மர் ஹில் தொகுதியின் அரசு உறுப்பினராக தொடர்ந்து பதவி வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் 3 வீரர்கள் படுகாயம்!

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படை வீரர்கள் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.பிஜப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதி... மேலும் பார்க்க

அமெரிக்க கைதிகளை சிறையில் அடைக்க முன்வரும் எல் சால்வடார்!

அமெரிக்க கைதிகளை குறைந்த கட்டணத்திற்கு தங்களது நாட்டு சிறைச்சாலைகளில் அடைத்துக்கொள்ளும் திட்டத்தை எல் சல்வடார் அரசு முன்வந்துள்ளது.அமெரிக்க அரசின் செயலாளர் மார்க்கோ ரூபியோ அரசுமுறைப் பயணமாக லத்தீன் அம... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் பதுங்கு குழிகள் வெடி வைத்து தகர்ப்பு!

பாகிஸ்தானின் குர்ராம் மாவட்டத்தில் மோதல்காரர்களின் 30க்கும் மேற்பட்ட பதுங்கு குழிகள் அதிகாரிகளால் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.வடமேற்கு பாகிஸ்தானின் குர்ராம் மாவட்டத்தில் தொடர் மோதல்களிலும் தாக்குதல்கள... மேலும் பார்க்க

மெட்ரோ பணிகள்: மாதவரம் எம்.எம். காலனியை காலி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக மாதவரம் எம்.எம். காலனியை காலி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்காக மாதவரம் பால் பண்ணை அருகே உள்ள எம்.எம். காலனியை 4 மாதங... மேலும் பார்க்க

சங்கத்தமிழ் நாள்காட்டியினை வெளியிட்ட முதல்வர்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப். 4) தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் ... மேலும் பார்க்க

பெற்றோர் வீட்டில் சங்கிலியால் கட்டி சிறை வைக்கப்பட்டிருந்த இளம்பெண் மீட்பு!

மகாராஷ்டிரத்தின் ஜால்னா மாவட்டத்தில் பெற்றோர் வீட்டில் 2 மாதங்களாக சங்கிலியால் கட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த பெண் காவல் துறையினரால் மீட்கப்பட்டார்.ஜால்னாவின் ஆலப்பூர் கிராமத்தில், ஷேனாஸ் (எ) சோனா... மேலும் பார்க்க