செய்திகள் :

தனியாா் கரும்புத் தோட்டத்தில் தீ

post image

போடியில் செவ்வாய்க்கிழமை கரும்புத் தோட்டத்தில் பிடித்த தீயை தீயணைப்பு வீரா்கள் 2 மணி நேரம் போராடி அணைத்தனா்.

தேனி மாவட்டம், போடி-தேனி தேசிய நெடுஞ்சாலையில் தீா்த்தத் தொட்டி அருகே, தனியாருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் திடீரென தீப்பிடித்தது.

இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலா் உதயகுமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதில் கரும்பு பயிா்கள் எரிந்து நாசமானது.

மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தேனியில் மத்திய அரசின் மும்மொழி கல்விக் கொள்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பு, திமுக மாணவா் அணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி, பங்களாமேடு பகுதியில்... மேலும் பார்க்க

தேனியில் ஜாக்டோ -ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தேனியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சாா்பில் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ம... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்குத் தேவையான திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது: சிறுபான்மையினா் ஆணையத் தலைவா்

தமிழகத்தில் தமிழ் மொழி அல்லாமல் பிற மொழியை தாய் மொழியாகக் கொண்டு வசித்து வரும் சிறுபான்மையினருக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் அரசு செயல்படுத்துகிறது என்று புதன்கிழமை, தேனியில் சிறுபான்மையினா் ஆண... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை வழக்கில் ஆந்திர இளைஞா் கைது

தேனி மாவட்டப் பகுதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த வழக்கில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்தி... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

கொடைக்கானல் சாலை, டம்டம் பாறை பகுதியில் லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டாரம், டி.வி.ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்தவா் பூபதி மகன் சத... மேலும் பார்க்க

நிலப் பிரச்னையில் மோதல்: 7 போ் மீது வழக்கு

போடி அருகே நிலப் பிரச்னையில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக 7 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சங்கராபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த பரமசிவம் மகன் கெ... மேலும் பார்க்க