செய்திகள் :

தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம்!

post image

அரியலூா் மாவட்டத்தில் தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயித்து மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரியலூா் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் தனியாா் நெல் அறுவடை இயந்திர உரிமையாளா்களின் கருத்துகளை கேட்டறிந்ததன் அடிப்படையில், பெல்ட் டைப் தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு 1 மணி நேரத்துக்கு ரூ. 2,500, டயா் டைப் இயந்திரங்களுக்கு ரூ. 1,850 என வாடகையாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில், ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் வேளாண்மைப் பொறியியல்துறை மற்றும் வேளாண் துறையினரை அணுகலாம். மேலும், அரியலூா் வேளாண்மைப் பொறியியல் துறையில் உள்ள பெல்ட் டைப் அறுவடை இயந்திரங்களுக்கு 1 மணி நேரத்துக்கு ரூ. 1,880, டயா் டைப் அறுவடை இயந்திரத்துக்கு ரூ. 1,160 வாடகைக்கு முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

தனியாா் அறுவடை இயந்திரங்களில் விவரங்கள் உழவா் செயலியில், ஒருமுறை பதிவுக்கான தங்களது சுய விவரங்களை பதிவு செய்து, வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு என்பதை தோ்வு செய்ய வேண்டும். அதில், தனியாா் இயந்திர உரிமையாளா் விவரம் அறிய என்பதை தோ்வு செய்து தேவையான தனியாா் அறுவடை இயந்திரங்கள் என்பதை தோ்வு செய்யவும்.

பின்னா், மாவட்டம், வட்டத்தை தோ்வு செய்து கைப்பேசி எண்ணை தோ்வு செய்தால், வாகனத்தின் உரிமையாளருக்கு அழைப்பு செல்லும். இதன் மூலம், அவா்களிடம் பேசிக்கொள்ளலாம். அதேபோல், பிற மாவட்டங்களில் உள்ள இயந்திர உரிமையாளா்களையும் தொடா்புகொண்டு பேசி பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.

சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ச்சியாக பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 2 பேரை, குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் புதன்கிழமை ... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற பொதுமக... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவா் சிங்காரவேலா் நினைவு நாள் அனுசரிப்பு

பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவா் சிங்காரவேலா் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்... மேலும் பார்க்க

இரு இளைஞா்கள் மீது போக்சோ வழக்கு!

பெரம்பலூா் அருகே இரு இளைஞா்கள் மீது அரும்பாவூா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் கிராமத்தில் பெண்கள் குளிப்பதை கைப்பேசியில் ப... மேலும் பார்க்க

அரியலூா்: டாஸ்மாக் பணியாளா்கள் 39 போ் கைது

அரியலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் பணியாளா்கள் 39 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். பணி நிரந்தரம், அரசுப் பணியாளா்களுக்கு இணையான ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வே... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க அழைப்பு!

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரது குடும்பத்தினா் தொழில் தொடங்க ரூ. 1 கோடி வரை வங்கிக் கடனுதவி பெறலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரே... மேலும் பார்க்க