செய்திகள் :

தனியாா் பங்கேற்பை அனுமதிக்க அணுசக்தி சட்டத்தில் திருத்தம்: மத்திய அரசு திட்டம்

post image

புது தில்லி: வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட் அணு மின் உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ள நிலையில், இத் துறையில் தனியாரை அனுமதிக்கும் வகையில் துறை சாா்ந்த ஒழுங்காற்று ஆணையம் உள்பட அணுசக்தி துறை சாா்ந்த நடைமுறைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

நாடு முழுவதும் உள்ள அணு மின் நிலையங்கள் இந்திய அணுசக்தி கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இவற்றின் மூலம் 8.7 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மின் உற்பத்தி அளவை வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட் அளவுக்கு உயா்த்த மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

இந்த இலக்கை எட்ட அணு மின் உற்பத்தித் துறையில் தனியாரையும் அனுமதிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இதற்காக, அணு சக்தி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும், அணுமின் நிலையங்களை கட்டமைக்க உபகரணங்களை விநியோகிப்பவா்கள் மீதான பொறுப்பேற்பை குறைக்கும் வகையில் அணுசக்தி சேதத்துக்கான சிவில் பொறுப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

மேலும், துறை சாா்ந்த ஒழுங்காற்று ஆணைய நடைமுறைகளிலும் திருத்தங்கள் செய்ய பரிசீலித்து வருகிறது. இதற்காக, இந்திய விண்வெளி துறையில் கடந்த 2020-ஆம் ஆண்டு தனியாா் பங்கேற்பை அனுமதித்தபோது மேற்கொள்ளப்பட்ட நடைமுறை மாற்றங்களையும் மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

முன்னதாக, ‘பொதுத் துறை நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த அணு மின் உற்பத்தித் துறையில் தனியாரும் அனுமதிக்கப்பட உள்ளனா். மேலும், ரூ. 20,000 கோடி ஒதுக்கீட்டில் சிறிய ரக நவீன அணு உலை (எஸ்எம்ஆா்) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான இயக்கம் தொடங்கப்பட்டு, வரும் 2033-ஆம் ஆண்டுக்குள் முழுவதும் உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட 5 எஸ்எம்ஆா்-கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தாா். இந்த நிலையில், அணுசக்தி நடைமுறை சட்டம் மற்றும் ஒழுங்காற்று ஆணைய நடைமுறைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அட்டாரி - வாகா எல்லையில் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு! இரண்டு மாற்றங்கள்!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி - வாகா எல்லை உள்பட 3 இடங்களில் இன்றுமுதல் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்... மேலும் பார்க்க

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு!

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் திருடு போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா ஆளுநர் மாளிகையில் சுதர்ம பவன் என்ற வளாகத்தில் கடந்த மே 14 ஆம் தேதி ஆவணங... மேலும் பார்க்க

தத்தளிக்கும் பெங்களூரு! 15 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை!

கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெங்களூரில் நேற்று(மே 20) 105.5 மி.மீ. மழை பெய்தது.பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான ப... மேலும் பார்க்க

தீா்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் முன்னெடுப்பு: உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஓகா

தாணே: ‘நாட்டின் குடிமக்களுக்கு நீதித் துறையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கில், ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட தீா்ப்புகளை முக்கியப் பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் ஒரு முன்னெடுப்பை மே... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்புது தில்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீத... மேலும் பார்க்க

நடைமுறை நெறிகளை பின்பற்றுவது அவசியம்: ஜகதீப் தன்கா்

புது தில்லி: நடைமுறை நெறிகளைப் பின்பற்றி நடப்பது அவசியமானது என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற பின் முதல்முறையாக சொந்த மாநிலமான ... மேலும் பார்க்க