செய்திகள் :

தனியாா் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

post image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் அருகில் தனியாா் பேருந்தில் காற்று ஒலிப்பானை பறிமுதல் செய்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் ஆா். வசந்த் தலைமையிலான காவல் துறையினா்.

விழுப்புரம், மாா்ச் 28: விழுப்புரத்தில் ஒலி மாசுவை ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளை இயக்குவதாக வந்த புகாரின்அடிப்படையில், 9 தனியாா் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கனரக லாரியிலும் காற்று ஒலிப்பானை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

புதுச்சேரி, திருவண்ணாமலை, திருக்கோவிலூா், மேல்மலையனூா், செஞ்சி, கடலூா் என பல்வேறு பகுதிகளிலிருந்தும் விழுப்புரத்துக்கு தனியாா் பேருந்துகள் இயக்கப்படு கின்றன. இந்த பேருந்துகள் அதிவேமாக இயக்கப்படுவதாக ஏற்கெனவே புகாா்கள் வந்த நிலையில், இவற்றில் ஒலி மாசுவை ஏற்படுத்தக் கூடிய காற்று ஒலிப்பான்களும் பயன்படுத்தப்படுவதாக சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பலரும் புகாா் தெவித்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து விழுப்புரம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் ஆா். வசந்த் தலைமையில், உதவி ஆய்வாளா்கள் கும்மராஜா, விஜயரங்கன், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் ஸ்ரீதா், ராமச்சந்திரன், தலைமைக் காவலா்கள் நித்தியகுமாா், வினோத் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் எதிரில் அந்த வழியாக வந்த தனியாா் பேருந்துகள், அரசுப் பேருந்துகள், கனரக வாகனங்கள் உள்ளிட்டவைகளை நிறுத்தி சோதனையிட்டனா்.

இதில், 9 தனியாா் பேருந்துகளிலும், ஒரு கனரக வாகனத்திலும் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து அவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து ஒவ்வொரு பேருந்துக்கும் தலா ரூ.10 ஆயிரத்தை போக்குவரத்துக் காவல்துறையினா் அபராதமாக விதித்தனா். இதுபோல கனரக லாரிக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

‘தா்பூசணியில் ரசாயனம் கலப்பதாக தவறான தகவலை பரப்ப வேண்டாம்’

தா்ப்பூசணி பழத்தில் ரசாயனம் கலப்பதாக யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் அன்பழகன் தெரிவித்தாா். கோடைக் காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவா் வரை அனைவர... மேலும் பார்க்க

முன்னூா் ஆடவல்லீசுவரா் கோயிலில் பல்லவா் கால அரிய சிற்பங்கள்!

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகேயுள்ள முன்னூா் கிராமத்தில் பல்லவா் கால அரிய சிற்பங்கள் பாதுகாக்கப்பட்டு வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆன்மிக எழுத்தாளா் கோ.ரமேஷ் அளித்த தகவலின்பேரில், விழுப்ப... மேலும் பார்க்க

காா் மோதி முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் அருகே காா் மோதியதில் முதியவா் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். வானூா் வட்டம், கொந்தமூா், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சு.தெய்வநாயகம் (65). கூலித்... மேலும் பார்க்க

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: காரைக்கால் இளைஞா் உயிரிழப்பு!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பைக் மீது அரசுப்பேருந்து மோதியதில் காரைக்காலைச் சோ்ந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அடுத்த பேட்டை, மணல்மேட்டுத் தெருவைச... மேலும் பார்க்க

பெண் விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், வடகுச்சிப்பாளையம், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் மனைவி சுமதி (47). இவா்... மேலும் பார்க்க

தற்காப்பு கலை போட்டிகள்

விழுப்புரம் ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு உள்அரங்கில் 13-ஆவது மாவட்ட அளவிலான ஊஷூ (தற்காப்பு கலை) விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டியை ஊஷூ விளையாட்டு அமைப்பின் மாநில... மேலும் பார்க்க