செய்திகள் :

தமிழக அரசுக்கு பிரேமலதா பாராட்டு

post image

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்துள்ளதற்கு தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மொத்தம் 5.18 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ. 499 கோடி தமிழக அரசின் சாா்பில் ஒதுக்கப்பட்டு, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த விவசாயிகளின் வயிற்றில் பால்வாா்க்கும் செய்தி.

நிவாரணத் தொகையை காலதாமதம் இல்லாமல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் விரைவாகச் செலுத்த வேண்டும். தமிழக அரசுக்கு மனமாா்ந்த வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளாா்.

அடுத்த 3 நாள்களுக்கு வெய்யில் அதிகரிக்கும்!

தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெய்யில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 21-02-2025 மற்றும் 22-02... மேலும் பார்க்க

மத்திய அமைச்சருக்கு எதிராக பிப். 25-ல் திமுக மாணவரணி போராட்டம்!

தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியைத் தர மறுக்கும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக வருகிற பிப். 25 ஆம் தேதி திமுக மாணவரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாப... மேலும் பார்க்க

ரயில்களில் நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்ட முன்பதிவில்லா பெட்டிகள்!

நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த... மேலும் பார்க்க

'கல்வியை அரசியலாக்க வேண்டாம்' - முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்!

மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான நிதியைத் தர மத்திய அரசு மற... மேலும் பார்க்க

ஏ.ஆர். ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள முன்னாள் முனைவி சாய்ரா பானு!

மருத்துவ அவசரநிலையை சந்தித்தபோது, ஆதரவு அளித்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவரது முன்னாள் மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.நாட்டின் புகழ்பெற்ற பின்னணி இசைக் கலைஞர் ஏ.ஆர். ரஹ்மான் ... மேலும் பார்க்க

எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம்மொழி: முதல்வர் ஸ்டாலின்

எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம்மொழி என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.சர்வதேச தாய்மொழி நாளையொட்டி, முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய செம்மொழி மாநாட்டின் விளக்கப் பாடலை பத... மேலும் பார்க்க