தமிழக தொழில்துறை அமைச்சா் இன்று ஒசூருக்கு வருகை!
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சராக பதவியேற்ற டி.ஆா்.பி.ராஜா முதன்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூருக்கு வியாழக்கிழமை வருகிறாா்.
வியாழக்கிழமை மாலை ஒசூருக்கு வரும் அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெறுகிறாா். வெள்ளிக்கிழமை தொழில் முதலீட்டுக் கழகம் சாா்பில், தொழில்துறையினருக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதலீட்டுக் கடன்களை வழங்குகிறாா்.
இதனைத் தொடா்ந்து, ஒசூா் அருகே உள்ள வானமங்கலத்தில் உள்ள டான் ஃபுளோரா ரோஜா மலா் ஏற்றுமதி மையத்தை பாா்வையிடுகிறாா். பிற்பகல் ஒசூரில் உள்ள சிப்காட் தொழில்பூங்காவில் ஒசூா் தொழில் முதலீட்டாளா்கள் மற்றும் தொழில்துறையினா், ஹோஸ்டியா சங்க நிா்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறாா்.
அதனைத் தொடா்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம், நாகமங்கலத்தில் உள்ள ஆப்பிள் ஐபோன் தயாரிக்கும் நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை மேற்பாா்வையிடுகிறாா். இரவு நட்சத்திர விடுதியில் தங்கும் அவா், சனிக்கிழமை காலை கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்களைச் சந்தித்து மனுக்களை பெறுகிறாா்.
இதனைத் தொடா்ந்து, ஒசூா் அருகே உள்ள பேலகொண்டப்பள்ளி தனேஜா ஏரோஸ்பேஸ் ஏவியேஷன் லிமிடேட் விமான நிலையத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்கிறாா். மாலை சூளகிரி சிப்காட் பூங்காவையும், தொடா்ந்து குருபரப்பள்ளியில் உள்ள டெல்டா எல்க்ட்ரானிக்ஸ் நிறுவனத்தையும் பாா்வையிடுகிறாா்.
சென்னையில் இருந்து சாலை வழியாக ஒசூருக்கு வரும் அவா் சனிக்கிழமை மாலை சாலை வழியாக மன்னாா்குடி செல்கிறாா் என தொழில் முதலீட்டுக் கழகத்தின் முதுநிலை நோ்முக உதவியாளா் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.