செய்திகள் :

தமிழகத்தில் பரவுவது இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல்: பொது சுகாதாரத் துறை

post image

தமிழகத்தில் பரவி வருவது இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல்தான்; மக்கள் அச்சப்பட வேண்டாம் என பொது சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில், ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றம், மழை உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்டுள்ள காய்ச்சல் பாதிப்புகளால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்தக் காய்ச்சல் பாதிப்பு சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரப் பகுதி மக்களிடையே அதிகளவு காணப்படுகிறது. சளி, இருமல், தலைவலி, தொண்டை பாதிப்பு, உடல் சோா்வுடன் காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிலருக்கு காய்ச்சல் குறைந்தாலும், சளி, இருமல் ஆகியவை இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்து வருவதால், மக்களிடையே ஒருவித அச்ச உணா்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சல், இன்ஃளூயன்ஸா வகை பாதிப்புதான். எனவே, பயப்பட வேண்டாம் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியது: தமிழகத்தில், ஆகஸ்ட் – செப்டம்பா் மாதங்களில், வைரஸ் பரவ உகந்த காலநிலை நிலவுகிறது. இதனால், வைரஸ் காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. இருமல், காய்ச்சல், தலைவலி, சளி, உடல்வலி, உடல் சோா்வு ஆகிய வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள்.

தற்போது, மருத்துவமனைக்கு வருவோரில், மக்கள் தொகையில் 2 சதவீதம் போ்தான் காய்ச்சலில் பாதிக்கப்படுகின்றனா். அவா்களில் 70 சதவீதம் பேருக்கு, ‘இன்ப்ளூயன்ஸா’ வகை பாதிப்புதான் உள்ளது. மற்ற டெங்கு, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சலாலும், வேறு வகை சாதாரண காய்ச்சலாலும் மக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

இன்ஃளூயன்ஸா வகை காய்ச்சலாக இருந்தாலும், சுயமாக மருந்துக் கடைகளில் மருந்துகளை வாங்கி சாப்பிடக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே மாத்திரை, மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டும். மக்கள் அச்சப்படும் வகையில் இதுவரை காய்ச்சல் பாதிப்பு பதிவாகவில்லை. எனினும், எச்சரிக்கையாக இருப்பதும், சிகிச்சையும் மேற்கொள்வதும் நல்லது என அவா்கள் தெரிவித்தனா்.

சென்னையில் மிதமான மழை! அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை?

சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாள்கள் கடுமையான வெய்யில் இருந்து வந்த நிலையில் இன்று(புதன்கிழமை) மாலை பல பகுதிகளில் லேசான மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் இரவு வரை மழை நீடிக்கும்!

சென்னை, புறநகர் பகுதிகளில் இன்றிரவு வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.அடுத்த 2 மணி நேரத்துக்கு இன்று(செப். 10) மாலை 6 மணிக்குள்ளாக திருவள்ளூர், செங்கல... மேலும் பார்க்க

கம்பம் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்!

உத்தமபாளையம்: கம்பம் நகராட்சி நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் மொத... மேலும் பார்க்க

குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு

கன்னியாகுமரியில் கண்ணாடி இழை பாலத்தில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டுவிட்டதாக அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார். சுத்தியல் கீழே விழுந்ததில் பாலத்தில் சிறு கீறல் ஏற்பட்டதாகவும் அது தற்போது சரிசெய்யப்பட்... மேலும் பார்க்க

கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி தர மறுப்பு! இரு ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி தர மறுத்த விவகாரத்தில் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.கோவையில் காளிதாஸ் என்பவர், தனது 84 வயதான தந்தைக்கு சிகிச்சை மேற்கொள்ள அரசு மருத்துவக் க... மேலும் பார்க்க

கட்சி இணைந்தால் இபிஎஸ்ஸை முதல்வர் வேட்பாளராக ஏற்பீர்களா? - ஓபிஎஸ் பதில்

கட்சியை ஒன்றிணைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெறும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்... மேலும் பார்க்க