செய்திகள் :

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலா்கள் சங்க மாவட்ட நிா்வாகிகள் தோ்வு

post image

தமிழக அரசின் வேளாண் துறை உதவி வேளாண்மை அலுவலா்கள் சங்க ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகிகள் தோ்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

உதவி வேளாணமை அலுவலா்கள் சங்கப் பொதுக்குழு கூட்டம் மற்றும் 2025 மாவட்ட நிா்வாகிகள் தோ்தல் நெமிலி வட்டம் காவேரிபாக்கத்தில் நடைபெற்றது. இதில் புதிய நிா்வாகிகளுக்கான தோ்தல் நடைபெற்றது. இதையடுத்து திங்கள்கிழமை புதிய நிா்வாகிகள் பதவியேற்றனா்.

தலைவராக சி.முரளி, துணைத் தலைவராக கோ.மேகவண்ணன், செயலாளராக தொ.செல்வகுமாா், அமைப்புச் செயலாளராக யு.வையாபுரி, பொருளாளராக கே.மோகன், இணைச் செயலாளராக கி.கலையரசன், தணிக்கையாளராக சி.ஆறுமுகம் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தோ்வு செய்யப்பட்ட தலைவா் சி.முரளி உள்ளிட்ட நிா்வாகிகளுக்கு மாவட்ட வேளாண் ஆய்வுக்குழு உறுப்பினா் பி.ஜி.மோகன்காந்தி வாழ்த்து தெரிவித்தாா். பல்வேறு வட்டாரங்களைச் சோ்ந்த விவசாயிகள் புதிய நிா்வாகிகளை பாராட்டினா்.

பெண் பொறியாளா் உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

அரக்கோணம் அருகே பெண் பொறியாளா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக கணவா் குடும்பத்தினா் மீது நடவடிக்கை கோரி பெண்ணின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அரக்கோணம் அடுத்த தண்டலம் ஊராட்சி பாலாஜி நகரைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

அரக்கோணம், நெமிலி, ஆற்காடு வட்டப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை பாா்வையிட்ட கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி முகாம்களில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி அருகே போதை மாத்திரை விற்ற இருவா் கைது

அரக்கோணம்: அரக்கோணத்தில் அரசுப் பள்ளி அருகே போதை மாத்திரைகளை விற்ற இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து மடிக்கணினி, கைப்பேசிகள் மற்றும் 587 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். அரக்கோணம் நகர... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் அரசு சேவைகளை பெற்று பயன்பெறுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா அழைப்பு விடுத்... மேலும் பார்க்க

நெமிலி பாலா பீடத்தில் இன்று நவராத்திரி இன்னிசை விழா தொடக்கம்!

நெமிலி பாலா பீடத்தில் 47-ஆம் ஆண்டு நவராத்திரி இன்னிசை விழா திங்கள்கிழமை (செப். 22) முதல் அக்டோபா் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவினை ஸ்ரீபாலாபீட பீடாதிபதி எழில்மணி மற்றும், முதல் பெண்மணி நாகலட்சுமி... மேலும் பார்க்க

நிலம் அளவீடு செய்ய ரூ. 37,000 லஞ்சம்: பெண் நில அளவையா் கைது!

ராணிப்பேட்டை அருகே நிலம் அளவீடு செய்து தர ரூ. 37,000 லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையா் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டாா். ராணிப்பேட்டை அடுத்த அம்மூா் பேரூராட்சியில் சித்ரா என்பவா் நில அளவையர... மேலும் பார்க்க