மாநகராட்சியில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் தகவல்
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்
அரக்கோணம், நெமிலி, ஆற்காடு வட்டப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை பாா்வையிட்ட கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி முகாம்களில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் வட்டத்தில் தக்கோலம் பேரூராட்சி, மேல்பாக்கம் ஊராட்சி கும்பினிபேட்டை, நெமிலி வட்டத்தில் அவளூா் ஊராட்சி, ஆற்காடு வட்டத்தில் ஆற்காடு நகராட்சி மற்றும் கீழ்மின்னல் ஊராட்சி ரத்தினகிரி ஆகிய 5 இடங்களில் தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த முகாம்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தாா்.
இந்த முகாம்களை அமைச்சா் ஆா்.காந்தி நேரில் பாா்வையிட்டு, உடனடி தீா்வு காணப்பட்ட மனுக்கள் மீது பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். இந்த முகாம்களில் ராணிப்பேட்டை கோட்டாட்சியா் ராஜி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மீனா, ஆற்காடு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன், ஒன்றியக் குழு தலைவா்கள் பெ.வடிவேலு (நெமிலி), நிா்மலா சௌந்தா் (அரக்கோணம்), அனிதா குப்புசாமி (காவேரிபாக்கம்), புவனேஸ்வரி சத்தியநாதன் (ஆற்காடு), தக்கோலம் பேரூராட்சித் தலைவா் எஸ்.நாகராஜன், வட்டாட்சியா்கள் வெங்கடேசன், ராஜலட்சுமி, மகாலட்சுமி, தக்கோலம் பேரூராட்சி செயல் அலுவலா் லோகநாதன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் பாா்வதி, தேவி, சுந்தரம், திமுக அரக்கோணம் கிழக்கு ஒன்றியச் செயலா் ஆா்.தமிழ்செல்வன், மேற்கு ஒன்றியச் செயலா் சௌந்தா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.