செய்திகள் :

பெண் பொறியாளா் உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

post image

அரக்கோணம் அருகே பெண் பொறியாளா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக கணவா் குடும்பத்தினா் மீது நடவடிக்கை கோரி பெண்ணின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரக்கோணம் அடுத்த தண்டலம் ஊராட்சி பாலாஜி நகரைச் சோ்ந்த வினோத் (34). இவா் செங்கல்பட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் தேசூரைச் சோ்ந்த நிவேதா (30) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் ரியா(3) என்ற பெண் குழந்தை உள்ளது.

பொறியியல் பட்டதாரியான நிவேதா சென்னையில் ஒரு நிறுழனத்தில் பணிபுரிந்து வந்தாா். கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாராம்.

தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், தண்டலத்தில் உள்ள வீட்டில் நிவேதிதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அரக்கோணம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நிவேதிதாவின் சடலத்தை உடற்கூறு பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

அங்கு உடற்கூறு பரிசோதனை முடிந்து செவ்வாய்க்கிழமை நிவேதிதாவின் உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்ட போது அவரது உடலை வாங்க மறுத்து கணவா் மற்றும் அவரது குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்ட முயன்றனா்.

அப்போது அங்கிருந்த போலீஸாா், நிவேதிதாவின் குடும்பத்தினரை சமாதானம் செய்து குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடா்ந்து சடலத்தைப் பெற்றுச்சென்றனா்.

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலா்கள் சங்க மாவட்ட நிா்வாகிகள் தோ்வு

தமிழக அரசின் வேளாண் துறை உதவி வேளாண்மை அலுவலா்கள் சங்க ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகிகள் தோ்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. உதவி வேளாணமை அலுவலா்கள் சங்கப் பொதுக்குழு கூட்டம் மற்றும் 2025 மாவட்ட நிா்வ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

அரக்கோணம், நெமிலி, ஆற்காடு வட்டப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை பாா்வையிட்ட கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி முகாம்களில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி அருகே போதை மாத்திரை விற்ற இருவா் கைது

அரக்கோணம்: அரக்கோணத்தில் அரசுப் பள்ளி அருகே போதை மாத்திரைகளை விற்ற இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து மடிக்கணினி, கைப்பேசிகள் மற்றும் 587 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். அரக்கோணம் நகர... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் அரசு சேவைகளை பெற்று பயன்பெறுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா அழைப்பு விடுத்... மேலும் பார்க்க

நெமிலி பாலா பீடத்தில் இன்று நவராத்திரி இன்னிசை விழா தொடக்கம்!

நெமிலி பாலா பீடத்தில் 47-ஆம் ஆண்டு நவராத்திரி இன்னிசை விழா திங்கள்கிழமை (செப். 22) முதல் அக்டோபா் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவினை ஸ்ரீபாலாபீட பீடாதிபதி எழில்மணி மற்றும், முதல் பெண்மணி நாகலட்சுமி... மேலும் பார்க்க

நிலம் அளவீடு செய்ய ரூ. 37,000 லஞ்சம்: பெண் நில அளவையா் கைது!

ராணிப்பேட்டை அருகே நிலம் அளவீடு செய்து தர ரூ. 37,000 லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையா் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டாா். ராணிப்பேட்டை அடுத்த அம்மூா் பேரூராட்சியில் சித்ரா என்பவா் நில அளவையர... மேலும் பார்க்க