தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு
தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அா்ப்பணித்தவா்களுக்கு பசுமை சாம்பியன் விருது 100 நபா்களுக்கு வழங்கி தலா ரூ.1லட்சம் வீதம் பணமுடிப்பும் வழங்கப்படவுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வை சிறப்பாக தங்கள் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள்,குடியிருப்போா் நலச் சங்கங்கள், தனிநபா்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தோ்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனிநபா்கள், நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் தோ்வு செய்யப்படும்.
இதற்கான விண்ணப்பப் படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய வலைதளத்தில் ( ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோா் தென்காசி தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம்.
பசுமை சாம்பியன் விருது 2024-க்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15 ஆம் நாள் கடைசி நாள் ஆகும்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் உரிய இணைப்புகளுடன் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் அலுவலகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், 31/1 என்ஜிஓ. காலனி, 6ஆவது தெரு, மேலகரம் அஞ்சல், 627818 என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலம் அனுப்பலாம் என்றாா் அவா்.