செய்திகள் :

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடக்கம்; இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

post image

தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி,

தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து விலகிய நிலையில், வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள், கேரளா மாஹே, தெற்கு உள் கர்நாடகா, ராயலசீமா, கடலோர ஆந்திர பிரதேச பகுதிகளில் நேற்று தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை
மழை

விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை செய்யலாம்.

மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம். திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை
மழை
முன்பு வெளியிட்டிருந்த அறிக்கையின் படி,

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதிகாலை கொட்டித் தீர்த்த மழை; அரசு மருத்துவமனைக்குள் புகுந்த நீரால் பொதுமக்கள் அவதி

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை முடிந்த நிலையில் இன்று முதல் வடகிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கியது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை விட்டு விட்டு பெய்த... மேலும் பார்க்க

கனமழை: இன்றும், நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்? -சென்னை வானிலை மையம் அப்டேட்

இன்று தமிழ்நாட்டில் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கைப்படி, ஆரஞ்சு அலர்ட் இன்று திருநெ... மேலும் பார்க்க

குன்னூர்: விடிய விடிய கனமழை, சாலையில் சரிந்த ராட்சத பாறைகள்; உயிர் தப்பிய பயணிகள்

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றிரவு ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள... மேலும் பார்க்க

``இன்று 21 மாவட்டங்களில் மழை'' - IMD வானிலை எச்சரிக்கை; தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை

இன்று அதிகாலை முதல் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின் படி, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தர்மபுரி, திருச்சி, சிவ... மேலும் பார்க்க

இன்றும், நாளையும் எங்கெங்கு மழை பெய்யும்? - வானிலை அறிக்கை; வீக் எண்ட் பிளான் கவனம் மக்களே!

இன்றும், நாளையும் எங்கெங்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி, இன்று தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் க... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் அடுத்த வாரத்தில் வடகிழக்குப் பருவமழை; எந்தெந்த தேதிகளில்? - இந்திய வானிலை மையம்

இந்திய வானிலை மையம் நேற்று வாராந்திர வானிலை கணிப்பை வெளியிட்டது. வடகிழக்குப் பருவ மழை எப்போது? அதில் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறித்து கூறப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர... மேலும் பார்க்க