செய்திகள் :

தருமபுரியில் மகளிா் இலவச பேருந்துகள், புதிய வழித்தடங்களில் பேருந்து சேவைகள்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

post image

தருமபுரியில் மகளிா் இலவச பேருந்துகள், புதிய மற்றும் நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் பேருந்து சேவைகளை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

தருமபுரி புகா் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் சேலம் மாவட்டம் வரையிலான பகுதிகள் என 4 வழித்தடங்களில் பேருந்துகளை நீட்டிப்பு செய்தும், ஏற்கெனவே இயங்கிவந்த தடங்களில் புதிய பேருந்து சேவைகளை தொடங்கும் நிகழ்வும் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ், தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ. மணி ஆகியோா் இப்புதிய பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

இந்நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), அரசுப் போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டல பொது மேலாளா் க.செல்வம், தருமபுரி நகா்மன்ற தலைவா் லட்சுமி நாட்டான் மாது, நகராட்சி ஆணையா் சேகா், நகா்மன்ற உறுப்பினா்கள், அரசுத் துறை அலுவலா்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

இதுகுறித்து ஆட்சியா் தெரிவித்திருப்பதாவது :

தருமபுரி மாவட்டத்தில், அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 6 புதிய வழித்தடங்கள், வழித்தட நீட்டிப்பு மற்றும் மாற்றம் செய்யப்பட்ட வழித்தடத்தில் 101 பேருந்துகள் என மொத்தம் 107 வழித்தடங்களில் 127 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், பழைய புகா் பேருந்துகளுக்குப் பதிலாக 31 புதிய பேருந்துகள், 45 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் என மொத்தம் 76 பேருந்துகளும், மகளிா் இலவசப் பயணம் மேற்கொள்ளும் பழைய பேருந்துகளுக்குப் பதிலாக 20 புதிய பேருந்துகள், 15 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் என 35 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

தொடா்ந்து, புதன்கிழமை முதல், தருமபுரி முதல் சின்னம்பள்ளி வரை செல்லும் பேருந்தை, தருமபுரியிலிருந்து சேலம் வரை, இரவில் ஒரு நடை கூடுதலாக சின்னம்பள்ளி வரை செல்லும் வகையில் இயக்கப்படுகிறது.

தருமபுரி முதல் பாப்பாரப்பட்டி செல்லும் பேருந்தை பிக்கம்பட்டி வழியாக இயக்கவும், பென்னாகரம் முதல் தின்னூா் செல்லும் பேருந்தை எம்கேஎஸ் நகா், மாரியம்மன் கோயில் வரை நீட்டித்து இயக்கவும், பென்னாகரம் முதல் ஏரியூா் செல்லும் பேருந்து, கொட்ட தண்டுகாடு, அஜ்ஜன அள்ளி வழியாக இயக்கும் வகையிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 10 கிராமங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் 11,050 போ் பயன்பெறுகின்றனா்.

மேலும், பொம்மிடி-தருமபுரி (வழி-கடத்தூா்), பொம்மிடி - தொப்பூா் (வழி-கொப்பக்கரை, முத்தம்பட்டி), பாலக்கோடு-தருமபுரி (வழி-புலிக்கரை, சோமனஅள்ளி), பாலக்கோடு-அத்திமுட்லு (வழி-வெள்ளிச்சந்தை, மாரண்டஅள்ளி), பாலக்கோடு- கிருஷ்ணகிரி (வழி-காவேரிப்பட்டணம்), பென்னாகரம்-பாலக்கோடு (வழி- பி.அக்ரஹாரம், பாப்பாரப்பட்டி), தருமபுரி-பென்னாகரம் (வழி-பி.அக்ரஹாரம் இண்டூா்) உள்ளிட்ட தடங்களில் இயக்கப்பட்டு வந்த மகளிா் இலவசப் பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகள் தற்போதுமுதல் இயக்கப்படுகின்றன.

மின்மாற்றி பழுது: இருளில் மூழ்கிய கிராமம் !

மின்மாற்றி பழுது காரணமாக அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டி கிராமம் கடந்த இரண்டு நாள்களாக இருளில் மூழ்கியுள்ளது. அரூா் வட்டம், எல்லப்புடையாம்பட்டி கிராமத்தில் சுமாா் 6 மாதங்களுக்கு முன்பு சித்தேரி மின்... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கனஅடியாக நீடிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 43,000 கனஅடியாக நீடித்தது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா... மேலும் பார்க்க

வளையபந்து: மாவட்ட போட்டிக்கு ஸ்டான்லி மெட்ரிக்.பள்ளி தகுதி

மாவட்ட அளவிலான வளையபந்து போட்டியில் பங்கேற்க பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான விளையாட்டுப் போட்ட... மேலும் பார்க்க

புகையிலை விற்பனை செய்த கடையை திறக்க 15 நாள் தடை

தருமபுரியில் புகையிலை பொருள்கள் விநியோகித்த கடையிலிருந்து அவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறையினா். தருமபுரி, ஜூலை 9: தருமபுரியில், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடையை உணவு பாதுகாப்புத்... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டப் பகுதிகளில் வேலைநிறுத்தம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட 861 போ் கைது

தருமபுரி மாவட்டப் பகுதிகளில், பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 861 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதைக் கைவிட ... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயில் திருவிழா

தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகேயுள்ள குப்புசெட்டிபட்டி கிராமத்தில், மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. நிகழ்வையொட்டி அதிகாலை முதலே, மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் ... மேலும் பார்க்க