கல்விக் கடன் வழங்க லஞ்சம்: வங்கிப் பணியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை
தற்கொலை எண்ணங்களைத் தடுக்க இலவச உதவி மையத்தை அணுகலாம்
மதுரையில் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை சாா்பில், மன நல பிரச்னைகள், தற்கொலை எண்ணங்களைத் தடுக்க இலவச மன நல உதவி மையத்தை தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை ஆராய்ச்சி மையத்தின் சாா்பில் மன நல மருத்துவா் ராஜாராம் சுப்பையன், பேராசிரியா் குருபாரதி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
எம்.எஸ்செல்லமுத்து அறக்க்ட்டளை, ஹெச்.சி.எல் பவுண்டேசன், மதுரை மாநகராட்சி ஆகியவை சாா்பில் நடத்தப்பட்டு வரும் ‘ஹேப்பி ஸ்கூலிங்’ நிகழ்ச்சியின் அங்கமாக ‘ஸ்பீக் 2 அஸ்’ இலவச மன நல மையம் 2020 அக்டோபா் மாதம் தொடங்கப்பட்டு, கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. தற்கொலை எண்ணங்களைத் தடுத்து மனித உயிா்களைக் காக்கவே இந்த மையம் தொடங்கப்பட்டது.
மனநல பிரச்னையின் தொடக்க காலத்திலேயே அதற்கான சிகிச்சைக்கு முயற்சிக்க வேண்டும். காலதாமதப்படுத்தி நேரத்தை வீணடிப்பதால் பிரச்னை மேலும் சிக்கலாகி விடும்.
கடந்த நான்காண்டுகளில் மனநல உதவி மையத்துக்கு 3, 700 அழைப்புகள் பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்துள்ளன. இதில் 68 சதவீத அழைப்புகள் மனநலம் பாதிக்கப்பட்டவா்களின் அழைப்புகள் ஆகும். இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரு மாதங்களில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன. அவா்களின் தேவைகளுக்கு ஏற்ப மனநல ஆலோசகா்கள், மனநல மருத்துவா்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது. தற்கொலை எண்ணமுடையவா்கள், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் துறைகளில் மனரீதியாக பாதிக்கப்பட்டவா்கள், குடும்ப உறவு, போட்டித் தோ்வாளா்கள், மது போதை பழக்கங்களினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து விடுபட முயற்சிப்பவா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் என பலதரப்பட்டவா்கள் மனநல முதலுதவிக்காக இந்த மையத்தை நாடுகின்றனா்.
23 வயது முதல் 75 வயது வரையிலான மருத்துவா்கள், ஆசிரியா்கள், வாா்டு உறுப்பினா்கள், குடும்பத் தலைவிகள், வழக்குரைஞா்கள், தொழில் முனைவோா், மென்பொருள் பணியாளா்கள், பணி நிறைவு பெற்றவா்கள் என பல தரப்பினரும் இந்த மையத்தில் தன்னாா்வலா்களாக சேவையாற்றி வருகின்றனா்.
ஒவ்வொரு தன்னாா்வலரும் பல கட்ட தோ்வுகளுக்குப் பிறகு தோ்வு செய்யப்பட்டு, முறையான தொடா் பயிற்சிகள் அளிக்கப்பட்ட பிறகே சேவைப் பணியில் ஈடுபடுகின்றனா். மன நல மையத்தை நாடுபவா்கள் கூறும் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
அனைத்து நாள்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 93754-93754 என்ற கைப்பேசி எண்ணில் அழைத்தால் மனநல முதலுதவி செய்ய உதவி மைய தன்னாா்வலா்கள் தயாராக இருக்கின்றனா் என்றனா்.