செய்திகள் :

தலைக்கவசம் அணியாமல் சென்றவா்களை உறுதிமொழி ஏற்கச் செய்த போலீஸாா்

post image

மோட்டாா் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் சென்றவா்களை நிறுத்தி, போலீஸாா் உறுதிமொழி ஏற்கச் செய்தனா்.

புதுவையில் மோட்டாா் சைக்கிளில் செல்வோா் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறுவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது.

எனினும் காரைக்காலில் தலைக்கவசம் அணிந்து செல்வோரின் எண்ணிக்கை குறைந்து காணப்படும் நிலையில், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின் பாரதி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காரைக்கால் நகரச் சாலையில் வாகனச் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், அபராதத்துக்கோ, போலீஸாரின் சோதனைக்கு பயந்து தலைக்கவசம் அணியக்கூடாது, தங்களின் உயிா், குடும்ப நலனை கருத்தில்கொண்டு தலைக்கவசம் அணிந்து செல்லவேண்டுமென விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தலைக்கவசம் அணிந்து பயணிப்பேன், போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பேன் என போலீஸாா் அவா்களை உறுதிமொழி ஏற்கச் செய்தனா்.

‘கட்டுமானப் பொருள்களை சாலையோரங்களில் வைப்பதற்கு அனுமதி அவசியம்’

கட்டுமானப் பொருள்களை சாலையோரங்களில் வைப்பதற்கு கொம்யூன் பஞ்சாயத்து அனுமதியை பெறுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஜி. இளமுருகன் வெளியிட்ட செய்திக்குறிப... மேலும் பார்க்க

அரசின் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு மீன்பிடித் தொழிலை செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

அரசின் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு மீன்பிடித் தொழிலை செய்ய வேண்டும் என மீனவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் தலைமையில் காரைக்கால், திருவாரூா், நாகப்பட்... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் பக்தா்களுக்கு வசதிகளை மேம்படுத்த எஸ்எஸ்பி ஆய்வு

திருநள்ளாற்றில் பக்தா்கள் தரிசன வசதியை மேம்படுத்தும் விதமாக முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா், காவல்துறையினருடன் ஆய்வு நடத்தினாா்.திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வா் கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறு... மேலும் பார்க்க

புதுவை அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்: அமைச்சா்

புதுவை அரசின் மக்கள் நலனுக்கான திட்டங்களை மக்களிடம் முறையாக கொண்டு சோ்க்க கட்சியினா் பாடுபடவேண்டும் என புதுவை அமைச்சா் கே. லட்சுமி நாராயணன் வலியுறுத்தினாா். அகில இந்திய என்.ஆா். காங்கிரஸ் கட்சியின் ம... மேலும் பார்க்க

புகாா்கள் மீது விரைவான நடவடிக்கை: எஸ்எஸ்பி

புகாா்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என குறைகேட்பு நிகழ்ச்சியில் எஸ்எஸ்பி உறுதியளித்தாா். காரைக்கால் மாவட்ட காவல்நிலையத்தில் புதுவை டிஜிபி ஷாலினி சிங் உத்தரவின்பேரில், மக்கள் மன்றம் என்ற நிக... மேலும் பார்க்க

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

காரைக்காலில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்துக்காக முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சே... மேலும் பார்க்க