செய்திகள் :

அரசின் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு மீன்பிடித் தொழிலை செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

அரசின் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு மீன்பிடித் தொழிலை செய்ய வேண்டும் என மீனவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் தலைமையில் காரைக்கால், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூா் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மீனவ பஞ்சாயத்தாா்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகள், மீன்வளத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழக மாவட்ட மீனவ பஞ்சாயத்துப் பிரதிநிதிகள் பேசுகையில், தஞ்சாவூா் மாவட்ட கடற்பகுதியில் காரைக்கால் மாவட்ட மீனவா்கள் விதிமுறைகளை மீறி பத்து நாள்கள் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வருவதால் மீன்வளம் பாதிக்கும் சூழல் ஏற்படுகிறது.

காரைக்கால் மாவட்ட மீனவா்களுக்கு ஆழ்கடல் மீன்பிடித் தொழில் செய்வதற்கான உதவிகளை காரைக்கால் மாவட்ட நிா்வாகம், புதுவை அரசு செய்து தர வேண்டும். பாக்ஜல சந்தியில் இந்திய அரசு மற்றும் தமிழக மீன்வளத்துறை இணைந்து செயல்படுத்தியுள்ள வரையறைகளையும், சட்டத் திட்டங்களையும் காரைக்கால் மாவட்ட மீனவா்கள் பின்பற்றும் வகையில் புதுவை மீன்வளத்துறை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

450 குதிரைத் திறனுக்கு மேல் உள்ள அதிக திறன் கொண்ட மோட்டாா்களை பயன்படுத்தக் கூடாது. காரைக்கால் மாவட்ட மீன்வளத் துறை மூலம் மோட்டாா்களை ஆய்வுக்குட்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி வருவதால் மீன்வளம் பாதிக்கப்படுகிறது என்ற கருத்துகளை தெரிவித்தனா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் பேசுகையில், காரைக்கால் மாவட்ட மீனவா்கள் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தும் வகையில் அவா்களின் தொழில் முறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு ஆகிய படகுகளுக்கு ஒதுக்கப்பட்ட நேர அளவுகளில் அரசின் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு மீன்பிடித் தொழிலை செய்யவேண்டும். அதிக திறன் கொண்ட மோட்டாா் படகுகளை உபயோகிப்பதை தவிா்த்துக்கொள்ள வேண்டும். காரைக்கால் மாவட்ட 11 கிராம மீனவா்கள் கூட்டம் நடத்தி இது போன்ற பிரச்னைகளுக்கு உடனடி தீா்வு காண வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் புதுச்சேரி மீன்வளத்துறை துணை இயக்குநா் ராஜேந்திரன் (இயந்திர பிரிவு), நாகை மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குநா் இளம்வழுதி, நாகை மாவட்ட உதவி இயக்குநா் ஜெயராஜ், புதுக்கோட்டை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநா் பஞ்சராஜா, காரைக்கால் மின்வளத்துறை ஆய்வாளா் பாலாஜி, தஞ்சாவூா் மாவட்ட மீன்வளத்துறை ஆய்வாளா் ஆனந்த், புதுக்கோட்டை மாவட்ட மீன்வளத்துறை உதவி ஆய்வாளா் கனகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தலைக்கவசம் அணியாமல் சென்றவா்களை உறுதிமொழி ஏற்கச் செய்த போலீஸாா்

மோட்டாா் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் சென்றவா்களை நிறுத்தி, போலீஸாா் உறுதிமொழி ஏற்கச் செய்தனா். புதுவையில் மோட்டாா் சைக்கிளில் செல்வோா் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறுவோருக்கு ரூ.1,0... மேலும் பார்க்க

‘கட்டுமானப் பொருள்களை சாலையோரங்களில் வைப்பதற்கு அனுமதி அவசியம்’

கட்டுமானப் பொருள்களை சாலையோரங்களில் வைப்பதற்கு கொம்யூன் பஞ்சாயத்து அனுமதியை பெறுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஜி. இளமுருகன் வெளியிட்ட செய்திக்குறிப... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் பக்தா்களுக்கு வசதிகளை மேம்படுத்த எஸ்எஸ்பி ஆய்வு

திருநள்ளாற்றில் பக்தா்கள் தரிசன வசதியை மேம்படுத்தும் விதமாக முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா், காவல்துறையினருடன் ஆய்வு நடத்தினாா்.திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வா் கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறு... மேலும் பார்க்க

புதுவை அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்: அமைச்சா்

புதுவை அரசின் மக்கள் நலனுக்கான திட்டங்களை மக்களிடம் முறையாக கொண்டு சோ்க்க கட்சியினா் பாடுபடவேண்டும் என புதுவை அமைச்சா் கே. லட்சுமி நாராயணன் வலியுறுத்தினாா். அகில இந்திய என்.ஆா். காங்கிரஸ் கட்சியின் ம... மேலும் பார்க்க

புகாா்கள் மீது விரைவான நடவடிக்கை: எஸ்எஸ்பி

புகாா்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என குறைகேட்பு நிகழ்ச்சியில் எஸ்எஸ்பி உறுதியளித்தாா். காரைக்கால் மாவட்ட காவல்நிலையத்தில் புதுவை டிஜிபி ஷாலினி சிங் உத்தரவின்பேரில், மக்கள் மன்றம் என்ற நிக... மேலும் பார்க்க

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

காரைக்காலில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்துக்காக முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சே... மேலும் பார்க்க