இந்த வார ராசிபலன் மார்ச் 18 முதல் மார்ச் 23 வரை #VikatanPhotoCards
நடுநிலையோடு செயல்படுபவர் பேரவைத் தலைவர் அப்பாவு: முதல்வர் ஸ்டாலின்
நடுநிலையோடு செயல்படுபவர் பேரவைத் தலைவர் அப்பாவு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பேரவைத் தலைவர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், அப்பாவு கனிவானவர், அதேநேரத்தில் கண்டிப்பானவர். என் தலையீடோ, அமைச்சர்கள் தலையீடோ இன்றி பேரவையை நடத்தி வருகிறார். நடுநிலையோடு செயல்படுபவர் பேரவைத் தலைவர் அப்பாவு.
விருப்பு, வெறுப்பின்றி வாதங்களை முன்வைக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர். யார் மீதும் யார் வேண்டுமானாலும் விமர்சனம் வைக்கலாம். சுதந்திரக் காற்றை இந்த பேரவை சுவாசிக்கிறது. அனைவரையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்த்து சிறப்பாக செயல்படுகிறார்.
பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்: எடப்பாடி பழனிசாமி
உட்கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பதை திசைதிருப்ப இந்த தீர்மானமா?. இவ்வாறு அவர் கூறினார். வரும் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான பிரத்யேக நிதிநிலை அறிக்கை 15-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன.
தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், பேரவை திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு கூடியது. பேரவைத் தலைவர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில் அதுகுறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற்றது.