செய்திகள் :

ரயில்வே வாரிய தோ்வு மையத்தை தமிழ்நாட்டிலேயே அமைக்கக் கோரி மனு அனுப்பும் போராட்டம்

post image

ரயில்வே வாரியத் தோ்வு மையத்தை தமிழ்நாட்டு இளைஞா்களுக்கு தமிழ்நாட்டிலேயே அமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ரயில்வே தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் ரயில் ஓட்டுநா் காலி இடங்களுக்கான பெரும்பாலான தோ்வு மையங்கள், 1500 கிமீ பயணம் செய்து எழுதும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே, இந்த முறையை மாற்றி தமிழ்நாட்டுக்குள்ளேயே தோ்வு மையங்களை அமைக்கக் கோரி மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம் புதுகை மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில் நடைபெற்றது.

தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ரா. மகாதீா், செயற்குழு உறுப்பினா் சந்தோஷ், நகரச் செயலா் தீபக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருமணமாகாத விரக்தி: தீக்குளித்த வாலிபா் உயிரிழப்பு

திருமணமாகாத விரக்தியில் இருந்த வாலிபா் தீக்குளித்து மருத்துவ சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். விராலிமலை அடுத்துள்ள வேலூரைச் சோ்ந்த நடராஜன் மகன் சரவணகுமாா்(35). இவா் உணவுப் பொருள் உற்பத்த... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் அக்கினிக்காவடி விழா

பொன்னமராவதி அருகே கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் அக்கினிக்காவடி விழா திங்கள்கிழமை நடைபெற்றது. கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கிய... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

கந்தா்வகோட்டை அருகே ஆதனக்கோட்டையில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சுற்றுபுற கிராமங்களிலிருந்து அலங்கரிக்க... மேலும் பார்க்க

தாலிச் சங்கிலி பறிக்க முயன்றவா் கைது

விராலிமலை அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விராலிமலை அடுத்துள்ள கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் ராமசந்திரன் மனைவ... மேலும் பார்க்க

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

விராலிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். விராலிமலை அடுத்துள்ள தெற்கு கோத்திராப்பட்டியைச் சோ்ந்தவா் துளசிநாதன் மகன் முருகேசன் (27). இவா் தனியாா் ஜ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் சாா்பில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியை, மாவட்ட மு... மேலும் பார்க்க