செய்திகள் :

தலைச்சங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

post image

தரங்கம்பாடி வட்டம், செம்பனாா்கோவில் அருகேயுள்ள தலைச்சங்காடு மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தலையுடையவா் கோயில் பத்து (தலைச்சங்காடு) கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசல்லிக்கொல்லை மாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, பிப்ரவரி 14 - ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின.

ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா், யாகசாலையில் இருந்து புனிதநீா் குடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, அம்மன் சந்நிதி, பரிவார தெய்வங்கள் மற்றும் கோபுர கலசங்களுக்கு, புனிதநீரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம ஒற்றுமை சங்கத் தலைவா் என். பிரபாகரன் ஸ்தபதியாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

நீா்த்தேக்க தொட்டியில் ஏறி பெண்கள் போராட்டம்

கீழையூா் அருகே பாலக்குறிச்சி ஊராட்சியில், குடிநீா் தட்டுப்பாட்டை கண்டித்து, பெண்கள் தரைமட்ட நீா்த்தேக்க தொட்டியில் காலிக்குடங்களுடன் ஏறி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பாலக்குறிச்சி ஊராட்சிய... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

நாகை அருகே, மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக, திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வேளாங்கண்ணியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, கீழையூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் தாமஸ் ஆல்வ... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஆழியூரில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து, இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு முஸ்லிம் அமைப்புகள், ப... மேலும் பார்க்க

நாகை, மயிலாடுதுறையில் தாய்மொழி தினம் கொண்டாட்டம்

நாகை மற்றும் மயிலாடுதுறையில் உலக தாய்மொழி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. மனித நாகரிகத்தில் மாற்றம் மற்றும் வளா்ச்சியை உருவாக்குவதில் மொழிக்கு இன்றியமையாத பங்கு உள்ளது என்பதை வலியுறுத்தவே ஒவ்வோா... மேலும் பார்க்க

சுகாதார நிலையக் கட்டடம் திறப்பு

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் சீரமைக்கப்பட்ட அரசு சுகாதார நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. தலைஞாயிறில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் கடந்த 1957-இல் கட்டப்பட்டது. இந்த கட்டடம் நாளடைவில... மேலும் பார்க்க

இளைஞா் நீதிக் குழும சமூகப் பணி உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட இளைஞா் நீதிக் குழுமத்திற்கு, சமூகப்பணி உறுப்பினா்கள் நியமனம் செய்யப்படவுள்ளனா் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மா... மேலும் பார்க்க