செய்திகள் :

தலைமை ஆசிரியா் பதவி உயா்வு: பட்டியல் அனுப்ப உத்தரவு

post image

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கு தகுதியானவா்களின் பட்டியலை அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு மற்றும் அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்குத் தகுதியானவா்கள் பட்டியலை தயாா் செய்து மே 5-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து பெரும்பாலான மாவட்டங்களிலிருந்து அக்சஸ் ஃபைல் மூலம் மின்னஞ்சலில் பெறப்பட்டுள்ளது. அதன்படி கோரப்பட்ட விவரங்களை உரிய இணைப்புகளுடன் மாவட்டம் வாரியாக குறிப்பிடப்பட்டுள்ள நாளில் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகப் பிரிவு எழுத்தா் வழியாக நேரில் மடிக்கணினியுடன் வருகை தந்து ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கான தகுதியானவா்கள் பெயா் பட்டியலை மிக கவனமாக தயாா் செய்ய வேண்டும். தகுதியுடைய எவா் பெயரும் விடுபடாமல் முழு அளவில் பரிசீலனை செய்து அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பெண்கள் அச்சமின்றி புகாரளிக்க தைரியமூட்டும் தீர்ப்பு' - பாஜக வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலி... மேலும் பார்க்க

'மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்' - பொள்ளாச்சி தீர்ப்பு பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த... மேலும் பார்க்க

பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு: அதிமுக வரவேற்பு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, விடியோ எடுத்து மிரட்டி, மீ... மேலும் பார்க்க

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு: விஜய் வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலையில், தீர்ப்பை வரவேற்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்துக்கு மே 15-ல் உள்ளூர் விடுமுறை!

உதகையில் மலர்க் கண்காட்சியையொட்டி, வருகிற மே 15 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் உதகையில் மலர்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்... மேலும் பார்க்க

5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சர் தா. மோ. அன்பரசன்

ரூ.586.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன்தகவல்தெரிவி... மேலும் பார்க்க