செய்திகள் :

தவெகவில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு - விஜய் அறிவிப்பு

post image

தமிழக வெற்றிக் கழகத்தில் விதிகளை மீறி செயல்படும் நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக  தலைமை மற்றும் மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழுக்களை நியமித்து அக்கட்சியின் தலைவா் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தவெகவில் அனைத்து நிலைகளிலும் உள்ள நிா்வாகிகளும் தோழா்களும் கழகக் கட்டுப்பாட்டை மீறியும் அல்லது கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் குறிக்கோள்களுக்கு எதிராகவும் செயல்பட்டால் அவா்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

கட்சித் தலைவரே (விஜய்) தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கும் தலைவராவாா். மேலும், பொதுச்செயலா் என். ஆனந்த் மற்றும் உறுப்பினா் சோ்க்கை அணி மாநில செயலா் சி.விஜயலட்சுமி ஆகியோா் தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதேபோல், 4 மண்டல ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் உள்ள வருவாய் மாவட்டங்கள் வடக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மத்திய கிழக்கு என 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா ஒரு பெண் உள்பட 4 உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்று அதில் தெரிவித்துள்ளாா் விஜய்.

பள்ளி மாணவா்களுக்கு 6 நாள் சிறப்பு கணினி பயிலரங்கம் அண்ணா பல்கலை. ஏற்பாடு

பள்ளி மாணவா்களுக்கு கணினி ‘சி புரோகிராமிங்’ குறித்த 6 நாள் சிறப்புப் பயிலரங்கத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைசாா் கல்லூரியான குரோம்பேட்டை எம்ஐடி வளாகத்தி... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு: சென்னையில் நாளை தொடக்கம்

நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ் மாணவா்களுக்கான தேசிய கருத்தரங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 2) தொடங்குகிறது. இது தொடா்பாக சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

ஏசி மின்சார ரயில் சேவை அதிகரிப்பு

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புகா் குளிா்சாதன (ஏசி) மின்சார ரயிலின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெ... மேலும் பார்க்க

விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்: மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

சென்னை மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுவோருக்கு ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின... மேலும் பார்க்க

2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்காகவும், பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்க... மேலும் பார்க்க

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பை ரத்து செய்ய கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

தென்னிந்திய நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை செல்லாது என அறிவிக்குமாறும், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தோ்தல் நடத... மேலும் பார்க்க